1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Thursday, May 20, 2010

உலகை இயக்கிய முதல் கம்ப்யூட்டர் ஒரு பார்வை !!!

இன்றைக்கு நமது கைகளுக்குள் இருக்கும் ஒரு சின்ன கைப்பேசியில் நவீன கணினியே இயங்குகிறது. அந்தத் தொழில் நுட்பத்தில் மகத்துவத்தையும், உன்னதத்தையும் நம்மில் பலரும் நினைத்துப் பார்ப்பதில்லை. ஏனெனில் அது இன்றைக்கு சந்தையில் எங்கும் கிடைக்கும் சாதாரணப் பொருளாகிவிட்டது.

இன்றைக்கு பல வீடுகளில் கணினி, தொலைக்காட்சியைப் போல மிக எளிதாய் நுழைந்து விட்டிருக்கிறது. அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், விற்பனை வளாகங்கள், வங்கிகள், ஆராய்ச்சிக் கூடங்கள், மருத்துவ நிலையங்கள் என எந்த ஒரு தளத்தை எடுத்துக் கொண்டாலும் கணினி இன்றி ஒரு அணுவும் அசையாது எனும் நிலமை இன்று நிலைபெற்று விட்டது எனலாம்.

இன்றைக்கு இப்படி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, மிகச் சிறிய அளவில் நமது பைகளில் அமைதியாய் துயிலும் இந்த தொழில்நுட்பத்தின் ஆரம்ப வடிவம் எப்படி இருந்தது ? அதன் பின்னால் நிகழ்ந்த பல்லாண்டு கால உழைப்பு எப்படிப்பட்டது என்பதை பின்னோக்கிப் பார்க்கும் போது வியப்பு மேலிடுகிறது.

கணினித் துறையின் உயிராதாரமான பணிகளில் ஒன்று மென்பொருள் (கணினியை இயக்குவதற்குத் தேவையான புரோகிராம்கள்) எழுதுவது. இந்த வேலையைச் செய்பவர்களை “கம்ப்யூட்டர் புரோகிராமர்” என அழைக்கின்றனர்.

இப்போது நாம் பார்க்கும் கணினியின் தொடக்கம் சார்லஸ் பாபேஜ் (1791-1871) என்பவரால் உருவாக்கப்பட்டது. கணிதத்தையும் எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை அவர் உருவாக்கினார்.

கணினியின் ஆரம்ப வடிவம் மிகப்பெரிய அறைக்குள் திணிக்கப்பட்ட ஏராளமான இயந்திரங்கள் என்பதே வியப்பூட்டும் உண்மையாகும். அறுபது ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கணினியை வைக்க ஒரு மிகப்பெரிய அறை தேவைப்பட்டிருக்கிறது. இப்போது இருப்பது போல வசதிகள், மானிட்டர், கீபோர்ட் எதுவும் இல்லாத, புள்ளிகளும் கோடுகளும் இணைந்து செயல்பட்ட முதல் கணினியில் எடை ஆயிரம் கிலோ.


அந்தக் கணினியில் வேகமும், விவேகமும் மிகவும் குறைவு. தற்போதைய சாதாரண கணினிகளின் நினைவாற்றல் அந்த முதல் கணினியின் நினைவாற்றலை விட பத்து இலட்சம் மடங்கு அதிகம் என்றால் நினைத்துப் பாருங்கள்.


அவருடன் இணைந்து பணியாற்றியவர் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் பைரன் என்பவரின் மகளான 'அகஸ்டா அடா கிங் ' என்பவர்

உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் ஒரு பெண். அவர் “அடா பைரன் லவ்லேஸ்” (1816-1852).

புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரான பைரனின் மகள் இவர். மிகச்சிறந்த கணித அறிஞராகவும், இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார்.
தொடக்க கால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின் மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை வடிவமைத்தவர் சார்லஸ் பாபேஜ்.

தன்னுடைய 18 வயதில் பாபேஜ் உடன் சேர்ந்து பணியாற்றினார், அடா. பாபேஜ் “அனலிட்டிக்கல் என்ஜின்” வடிவமைப்பில் ஈடுபட்டபோது அதன் ஆற்றலை மற்றவர்களைவிட மிகச்சரியாக விளங்கிக்கொண்டார். அனலிட்டிக்கல் என்ஜினை இயக்கத் தேவையான புரோகிராம்களையும் எழுதினார்.


கணினிகள் மூலம் இசையமைக்க முடியும் என முன்னறிந்து கூறினார் அடா. கணினித்துறையில் நீங்காத இடம் பெற்றுள்ள இவர், தன்னுடைய 36 வயதில் புற்று நோய் காரணமாக உயிரிழந்தார்.
அவர் நினைவைப் போற்றும் வகையில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை 1980 இல் கணினி நிரல் மொழி (Programme language) ஒன்றுக்கு அடா (ADA) என்று பெயர் சூட்டியது.

பல வருடங்களுக்கு முன்னால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது என்றாலும் . இந்த சாதனை அதிகரப்பூர்வமாக 1948ம் ஆண்டு ஜூன் 21ம் தியதி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது .
இந்த முதல் கணினி நிரூபித்த வினாடியே உலகில் மாபெரும் தொழில் நுட்ப, அறிவியல் விஞ்ஞான வளர்ச்சிக்கான முளை விட்ட வினாடி எனலாம். அந்த வினாடியைப் போல உன்னதமான நிமிடம் என் வாழ்வில் வந்ததில்லை என அதைக் கண்டுபிடித்த பேராசிரியர் பிரடி வில்லியம்ஸ் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.


1958 இல் ஒருங்கிணைச் சுற்றமைப்பு (Integerated cirucuit – IC) கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மூன்றாம் தலைமுறைக் கணினிகள் வந்தன. இதனால் ஒரு சாதாரணச் சில்லைப் (Chip) பயன்படுத்தி பல கணினிப் பகுதிகளை இணைக்க முடிந்தது. ஒரு இயக்க அமைப்பினைப் (Operating system) பயன்படுத்தி பல நிரல்களை (Programmes) இயக்கும் வாய்ப்பும் உண்டாயிற்று. மேலும் நான்காம் தலைமுறைக் கணினி உருவாவதற்கும் வழி ஏற்பட்டது.

1971 இல் இன்டெல் நிறுவனம் கண்டுபிடித்த 4004 சில்லுவில் மையச் செயலகம் (Central Processing Unit – CPU), நினைவகம் (Memory), உள்ளீடு/வெளியீட்டுக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் ஆகிய அனைத்தும் இடம்பெற்றன. ஃ 1981 இல் IBM நிறுவனம் தனியாள் கணினியை (Personal Computer – PC) அறிமுகப்படுத்தியது.

1983 இல் தனியாள் கணினியை அவ்வாண்டின் சிறந்த மனிதனாக 'டைம்ஸ் ' இதழ் தேர்ந்தெடுத்தது.


பரம் 10000 என்னும் கணினி இந்தியாவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மீக்கணினியாகும் (Super computer).

தற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள மொத்தக் கணினிகளின் எண்ணிக்கை உலகின் மற்ற எல்லா நாடுகளிலுள்ள கணினிகளின் எண்ணிக்கையைவிடக் கூடுதலாகும்.


அந்த முதல் விதை விழாமல் இருந்திருந்தால், அந்த முதல் மூளை எழாமல் இருந்திருந்தால் இன்றைக்கு நாம் காணும் பெரும்பாலான வளர்ச்சிகள் சாத்தியமில்லாமல் போயிருக்கக் கூடும்.


பேபி – என பெயரிட்டழைத்து இந்த மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்திய டாம் கில்பர்ன், அடா பைரன் லவ்லேஸ் , சார்லஸ் பாபேஜ் , மற்றும் பிரட்டி வில்லியம்ஸ் இவர்களில் யாருமே இன்று உயிருடன் இல்லை எனினும் அவர்களுடைய பெயர் வரலாற்றில் அழிக்கப்படாத நிலையில் அழுத்தமாக எழுதப்பட்டு விட்டது என்பது மட்டும் யாராலும் மறுக்கமுடியாத உண்மை .

Wednesday, May 5, 2010

எங்கெங்கும் அர்த்தங்கள்

தமிழிலேயே பல வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் நமக்குத் தெரிவதில்லை. ”இலமே” என்ற வார்த்தைக்கான பொருளை சில நாட்களுக்கு முன்பாகத் தேடிக் கொண்டிருந்தேன். கூடுதலாக ஒரு காலை சேர்த்துவிட்டால் வார்த்தையின் பொருள் எப்படி மாறிவிடுகின்றது பாருங்கள். மக்களையும் மாக்களையும் சொன்னேன். மாக்கள் என்றால் கால்நடை மிருகங்களென்று அர்த்தமாம். இப்படியிருக்க ஆங்கில சொற்களுக்கான அர்த்தம் மட்டும் சொல்ல வேண்டுமாக்கும். தினமும் அர்த்தம் தெரியாத litigation, mitigation போன்ற ஆங்கில வார்த்தைகள் நமக்குமுன் வந்து போய்கொண்டிருக்கின்றன. bmimthiyas என்ற நண்பர் அறிமுகம் செய்து வைத்த WordWeb என்ற சிறிய மென்பொருள் இப்போது எனக்கு மிகவும் பிடித்துப் போன ஒன்று. எந்த ஆங்கில வார்த்தையின் மீதும், எந்த அப்ளிகேசனிலிருந்தும், ctrl+rightclick செய்தால் அந்த வார்த்தைக்கான பொருளை இந்த மென்பொருள் அருமையாக மிக விளக்கமாக கொட்டி விடுகின்றது. நோட்பேடில் கூட ஆங்கில வார்த்தைகளுக்கான அர்த்தங்களை நாம் கண்டறியலாம். என்னைப்போன்ற ஆங்கிலம் அவ்வளவாக தெரியாத நண்பர்களுக்கு மிகவும் பயனாகும் இலவச மென்பொருள் இது.
http://wordweb.info/free/

Wednesday, April 28, 2010

பைல்களைப் பிரித்தாலும் சேர்த்தாலும்






நம் அன்றாடக் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பி.டி.எப். பைல்களை அடிக்கடி கையாள்கிறோம். படிப்பதற்கு பாண்ட் பைல் இல்லாமல் எந்த சிஸ்டத்திலும் படிக்கக் கூடிய வசதியை இவை தருகின்றன. அதே போல ஆடியோ மற்றும் வீடியோ பைல்களும் எந்த சிஸ்டத்திலும் பயன்படுத்தலாம். ஆனால் இந்த பைல்கள் மிகப் பெரிதாக இருக்கையில், இவற்றை அனுப்ப முயற்சிக்கையில், இந்த பைல்களை நாம் சுருக்க வேண்டியுள்ளது. பின் அவற்றை இணைக்கும் வழிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. மேலும் இந்த பைல்களில், குறிப்பாக ஆடியோ மற்றும் வீடியோ பைல்களில், குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் பிரித்தெடுக்க விரும்புகையில், பைல்களின் பகுதிகளைப் பிரிக்க தனித் திறன் கொண்ட சாப்ட்வேர் புரோகிராம்கள் தேவைப்படுகின்றன. இந்த தேவையை மனதில் கொண்டு தேடுகையில் கிடைத்த சில தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.
1. Gios PSM:  பி.டி.எப். பைல்களைப் பிரிப்பதற்கும் இணைப்பதற்குமான அருமையான ஒரு புரோகிராம் Gios PSM (GiosPdf Splitter and Merger) என்பது. பி.டி.எப். பைல்களைக் கையாள ஓப்பன் சோர்ஸ் முறையில் அமைக்கப்பட்ட புரோகிராம் இது. இது 145 கேபி அளவிலான சிறிய எக்ஸிகியூட்டபிள் பைல். போர்ட்டபிள் வகையாக இதனைப் பயன்படுத்தலாம். டாட் நெட் பிரேமில் செயல்படுகிறது. இந்த புரோகிராமினை இயக்கிவிட்டு, பி.டி.எப். பைல்களை ட்ராக் அண்ட் ட்ராப் முறையில், இழுத்துச் சென்று இந்த புரோகிராமின் லிஸ்ட்டில் விட்டுவிடலாம். எத்தனை பி.டி.எப். பைல்களை வேண்டுமானாலும், மொத்தமாகப் பட்டியலிட்டு இணைத்து ஒரு பைலாக மாற்றலாம். குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் ஒவ்வொரு பைலிலும் தேர்ந்தெடுத்து இணைக்க விரும்பினாலும், இந்த புரோகிராம் அதற்கான வழிகளைத் தருகிறது. இந்த புரோகிராமைப் பயன்படுத்துவதில் இருக்கின்ற ஒரு சின்ன சிக்கலைச் சொல்லியே ஆக வேண்டும். சில நேரங்களில் பைல்களை இணைக்கையில் இது கிராஷ் ஆகிறது. ஆனால், இதனால் எந்த பிரச்னையும் ஏற்பட்டதில்லை. இதனை இலவசமாக டவுண்லோட் செய்திட http://www.paologios.com/products/?type=bin  என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
2. Split Files 1.6: உங்கள் நண்பருக்கு ஏதேனும் ஒரு பெரிய இ–புக் ஒன்றை அனுப்ப முயற்சிக்கிறீர்கள். நிச்சயம் அதனை மின் அஞ்சலில் அட்டாச் செய்து அனுப்புகையில், பிரச்னை எழும். பைல் அளவு பெரிதாக இருப்பதால், இணைக்க முடியாது. இந்த நேரத்தில், அதனைப் பிரித்து அனுப்ப உதவ, இந்த புரோகிராம் உதவும். இதனை http://www.softpedia.com /get/System/FileManagement/SplitFiles.shtml என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்து இயக்கவும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நீங்கள் பிரிக்க விரும்பும் பைலை, அது உங்கள் கம்ப்யூட்டரில் எங்கு இருக்கிறது என்று சுட்டிக் காட்ட வேண்டியதுதான். அடுத்து ஸ்பிளிட் (Split)  என்ற பட்டனைக் கிளிக் செய்தால், உடனே எந்த வகையில் பிரிக்க வேண்டும் என உங்களிடம் கேட்கப்படும். நீங்கள் வகைகளைக் கொடுத்த பின்னர், பைல் பிரிக்கப்படும். நீங்கள் பிரித்த பைல்களை இணைக்க வேண்டுமாயின் Combine என்ற பட்டனில் கிளிக் செய்து காரியத்தை முடிக்கலாம்.
3. Adolix Split and Merge PDF:  ஒரு பி.டி.எப். பைலை பிரிக்க வேண்டிய சூழ்நிலையும், ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை இணைக்க வேண்டிய சூழ்நிலையும் எப்போதும் நமக்கு ஏற்படும். இந்த இரண்டு பணிகளிலும் நமக்கு உதவுவது Adolix Split and Merge PDF என்ற பைலாகும். இதனை http://www.adolix. com/splitmergepdf/ / என்ற தளத்தில் பெறலாம். பெற்று டவுண்லோட் செய்து, பின் இன்ஸ்டால் செய்த பின், இந்த வேலைகளுக்கு நம்மை எளிதாக வழி நடத்திச் செல்லும் வகையில், இந்த புரோகிராமில் யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது. இந்த புரோகிராமின் உள்ளாக அமைக்கப்பட்டுள்ள மெனு, விண்டோஸ் எக்ஸ்புளோரரில் வேலை செய்கிறது. மிக எளிதாக பைல்களைத் தேர்ந்தெடுக்கவும், பிரிக்கவும், இணைக்கவும் வழி தருகிறது. இந்த பைல் அளவு 2.7 எம்.பி மட்டுமே.
4. HJ split:  இதனைப் பெற http://www.freebyte.com/hjsplit/#win 32  என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இதனைப் பயன்படுத்தி 10 ஜிபி அளவில் உள்ள பைலையும் பிரிக்க முடியும் என இந்த தளத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு போர்ட்டபிள் சாப்ட்வேர். எளிதாக சிடி, பென் டிரைவ்களில் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. ஆனால் பிரிக்கப்பட்ட பைல்களை இணைக்க, உங்கள் நண்பரிடமும் இந்த பைல் தேவைப்படும்.
5.GSplit: : இந்த புரோகிராமும் பைல்களைப் பிரிக்கவும் இணைக்கவும் பயன்படுகிறது. இணைக்கும் இடத்திலும் இந்த புரோகிராம் தேவைப்படும். இதனைப் பெற http://www.gdgsoft.com/gsplit/ / என்ற முகவரிக்குச் செல்லவும்.
6. .JR Split: http://www.spadixbd.com/ freetools/jsplit.htm என்ற தளத்தில் கிடைக்கும் JR Split என்ற பைலும் இந்த வகையில் சிறந்த ஒன்றாக உள்ளது.
7. MP3cut:  எம்பி3 பைல் பிரிக்கப் பல சாப்ட்வேர் தொகுப்புகள் இருந்தாலும், வேறு கம்ப்யூட்டர்களில் இருந்து அவற்றை இயக்க முடியாது. மேலும் அதே கம்ப்யூட்டரில் வேறு சாப்ட்வேர்களைப் பதியவும் முடியாது. இந்த சூழ்நிலையில் நமக்கு உதவ MP3 cut  உதவுகிறது. இயக்குவதற்கு எளிய புரோகிராம் இது. எந்தப் பிரச்னையும் இன்றி எம்பி3 பைல்களை, நம் தேவைக்கேற்றபடி பிரிக்க உதவுகிறது. இந்த (MP3Cut.net) தளத்திற்குச் சென்று நாம் பிரிக்க வேண்டிய பைலை அப்லோட் செய்திட வேண்டும். எந்த இடத்தில் பிரிக்க வேண்டும் என குறிக்க, ஸ்லைடர்கள் தரப்பட்டுள்ளன. இடது ஸ்லைடர் பிரிவு தொடங்கும் இடத்திலும் வலது ஸ்லைடர் பிரிவு முடியும் இடத்திலும் இருக்க வேண்டும். பிரிவுகளைக் குறித்த பின்னர் split and download   என்பதில் கிளிக் செய்திட வேண்டும். பைல் நீங்கள் குறிப்பிட்ட இடத்தை அடையாளம் வைத்துப் பிரித்து தனி பைலாக்கும். பின்னர் அந்த பைலை டவுண்லோட் செய்திட வேண்டும். இதிலேயே எம்பி 3 பைலை இயக்கவும் வசதி உள்ளது. இதன் மூலம் பிரிக்க வேண்டிய இடங்களைக் குறித்திட எளிதாக உள்ளது. இதன் மூலம் உங்களுக்குப் பிடித்த பாடலில் உள்ள, உங்களுக்குப் பிடித்த இசை/பாடல் உள்ள இடத்தைப் பிரித்து, மொபைல் போனில் ரிங் டோனாக அமைத்துக் கொள்ளலாம். இதனால் எந்த சாப்ட்வேர் தொகுப்பினையும் உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்திடாமல், பாடல் பைல்களைப் பிரிக்க முடிகிறது.

ஜிமெயிலில் எந்த பைலையும் அனுப்ப ...


ஜிமெயிலில் எந்த பைலையும் அனுப்ப


இமெயில் பயன்படுத்தும் அனைவரும் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றினைத் தொடங்குவார்கள். பின் அதனையே தங்கள் மெயின் அக்கவுண்ட்டாக வைத்துக் கொள்வார்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு. ஜிமெயில் தரும் வரையறை இல்லாத டிஸ்க் இடம், வைரஸை அண்டவிடாத ஸ்கேனர், இமெயிலுடன் ஒட்டி வரும் பைல்களைக் கண்காணிக்கும் சாதனம் எனப் பல விஷயங்களைக் கூறலாம்.
நமக்கு வரும் இமெயிலுடன், அல்லது நாம் அனுப்பும் இமெயிலுடன் இணைக்கப்பட்டு வரும் பைல்களை, ஜிமெயில் தளத்தில் உள்ள ஆண்ட்டி வைரஸ் ஸ்கேனர் சோதனை செய்து, வைரஸ் எதுவும் இல்லை என்ற பின்னரே, நம்மை டவுண்லோட் செய்திட வழிவிடும். இதனாலேயே exe, dll, ocx, com or batபோன்ற துணைப்பெயர்கள் கொண்ட  பைல்களை ஜிமெயில் இணைக்க விடுவதில்லை. ஜிமெயிலை ஏமாற்றுவதாக நினைத்து, இந்த பைல்களை ஸிப் செய்து .zip, .tar, .tgz, .taz, .z, .gz  என்ற ஏதேனும் ஒரு பார்மட்டில் ஸிப் பைலாக அனுப்பினாலும், ஜிமெயில் கண்டு கொண்டு தடுத்துவிடும். (ஆனால் rar என்ற ஸிப் பைலுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கிறது ஜிமெயில்). ஆனால் இந்த தடை நமக்கு சில நேரம் எரிச்சலைத் தரும். எடுத்துக்காட்டாக நண்பர் ஒருவருக்கு Firefox Setup 1.5.exe 4.98 MB   என்ற பைலை அனுப்ப முயற்சித்தேன். ஜிமெயில் This is an executable file. For security reasons, Gmail does not allow you to send this type of file  என்ற எச்சரிக்கை செய்தியைத் தந்து அதனை அப்லோட் செய்திட மறுத்தது. இங்கு என்ன நடக்கிறது என்றால், ஜிமெயிலில் உள்ள வைரஸ் ஸ்கேனர் இந்த பைலை ஸ்கேன் செய்திடாமல், இதன் துணைப் பெயர் .exe என்பதால், தொடக்கத்திலேயே இணைப்பதற்கு எடுத்துக் கொள்ள மறுக்கிறது. யாஹூ தளம் சார்ந்த சர்வரிலும் இதே போன்ற ஸ்கேனர் உள்ளது. ஆனால் யாஹூ .exe பைல்களை ஏற்றுக் கொள்கிறது. யாஹூ மெயில் சைமாண்டெக் சாப்ட்வேர் தொகுப்பினை ஸ்கேன் செய்திடப் பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஆனால் ஜிமெயில் எந்த சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்தி, ஸ்கேன் செய்கிறது என்று நமக்கு அறிவிக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் ஜிமெயில் பயன்படுத்துபவர்கள், இத்தகைய பைல்களை அனுப்ப எந்த வழிகளைக் கையாளலாம் என்று பார்க்கலாம்.
முதலாவதாக, Rapidshare, Megaupload அல்லது Yousendit  போன்ற தளங்களைப் பயன்படுத்தி, அனுப்ப விரும்பும் பைல்களை அப்லோட் செய்திடலாம். பின்னர் இந்த தளம் வழங்கும் லிங்க்கினை, ஜிமெயில் மூலம் அதனை அனுப்புபவருக்குத் தெரிவித்துவிடலாம்.
இரண்டாவதாக பைலின் பெயரைச் சற்று மாற்றி, ஜிமெயில் ஸ்கேனரை முட்டாளாக்கலாம். எடுத்துக்காட்டாக,  AdobeReader.exe  என்ற பைலின் பெயரை AdobeReader.exe.removeme  என மாற்றி அமைத்து, நண்பருக்கு இந்த மாற்றம் குறித்து தெரிவிக்கலாம். அவர் இதனைப் பெற்ற பின்னர் பைலின் பெயரை மாற்றிப் பயன்படுத்தலாம்.
மூன்றாவதாக, நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட exe  பைல்களை அனுப்ப வேண்டும் என்றால், அவை அனைத்தும் ஸிப் செய்து பின்னர், அந்த ஸிப் பைலின் துணைப் பெயரை மாற்றி அனுப்பலாம்.
நான்காவதாக WinRAR  என்ற ஸிப் பைல் டூலைப் பயன்படுத்தி ஸிப் செய்து அனுப்பலாம். ஏனென்றால், ஜிமெயில் இதனை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் முதலாவதாகச் சொல்லப்பட்டுள்ள வழி தான் சரியான வழி. மற்ற வழிகள் கூகுள் அமைப்பை ஏமாற்றுவதாகவே உள்ளன. இது கூகுள் அக்கவுண்ட் பெறுகையில் நாம் ஒத்துக் கொண்ட கட்டுப்பாடுகளை மீறுவதாகும்.