1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Monday, July 5, 2010

சிங்கையில் மாணவர்களும், கல்வியும்....

சிங்கையில் கல்வி, மாணவர்களுக்கு அனாவசிய மனஅழுத்தத்தைக் கொடுப்பதில்லை. மனப்பாடம் செய்யத் தேவை இல்லாத பாட திட்டம். என்ன ....... விஷயத்தை நன்றாகப் புரிந்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும். ‘டப்பா’ அடித்து ஓட்ட முடியாது.
வீட்டுப் பாடங்கள் நம்மூர் அளவுக்கு இல்லை. ஆசிரியர்கள் மிரட்டுவதில்லை. மாணவர்கள் ஜாலியாய் படிக்கிறார்கள். பார்க்கப் பொறாமையாய் இருக்கிறது.

பள்ளியும் அரை நாள் மட்டுமே! பெற்றோர்களாக துணைபாட வகுப்புகளை இழுத்துவிட்டாலே தவிர, அதிக மன உளைச்சல் இல்லை.

என்மொழி, உன்மொழி என்று அடித்துக் கொள்ளாமல், அவரவர் தாய்மொழியைக் கற்றுக் கொள்ளும் படி மாணவர்கள் ஊக்குவிக்கப் படுகிறார்கள். சீனம், மலாய், தமிழ் மூன்றிற்குமே இங்கு சம மதிப்பு . குடும்பத்தாருடன் தாய் மொழியில் பேசுங்கள் என்று மாணவர்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறார்கள்.

பாடம் மட்டுமே இல்லாமல் மற்ற கலைகளிலும் கவனம் எடுத்துக் கொள்கிறார்கள். இந்திய நடனம் , சீன நடனம், ஹார்மோனிகா, அங்கலாங் போன்ற பாரம்பரியக் கலைகளைக் கற்றுக் கொடுத்து , மேற்படிப்பின் போது இவற்றில் மாணவர்கள் ஆற்றிய பங்கையும் கவனத்தில் கொள்கிறார்கள்.

தமிழர்கள், தமிழில் பேசாமல் இருப்பது குற்றம், என மனதில் பதிய வைக்கிறார்கள்.பேச்சுத் தமிழில் இருந்தாலும் பரவாயில்லை, எழுதுங்கள் என்று மாணவர்களுக்கு கதை, கட்டுரை போட்டிகள் வைத்து பரிசு கொடுக்கிறார்கள். வானொலியிலும் , தொ.காவிலும் நல்ல தமிழ் பேசத் தெரிந்தால் மட்டுமே வேலை! கொஞ்சு தமிழெல்லாம் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

நிறைய புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை சிறுவயதிலேயே ஏற்படுத்துகிறார்கள்.இத்தகு ஆவலைத் தூண்டுவதில் நூலகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. நூலகர்கள் நம்மை அனாவசியக் கேள்விகள் கேட்காமல், தனியாய் அமர்ந்திருக்கிறார்கள். நாமும் அவர்களை தொந்தரவு செய்யாமல் புத்தகங்களை எடுக்கவும், திருப்பவும் முடிகிறது. பல நல்ல நூல்களை இங்கே தொகுத்து வைத்திருக்கிறார்கள்.
நூலகத்தின் சூழலும், அமைதியாய், படிக்காவிட்டால் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

இவ்வளவு இருந்தும் பாடச் சுமை அதிகம் உள்ளதாய் இங்கேயும் சிலர் குரல் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் நம்மூருக்கு இழுத்து வந்து ஒரு கல்வியாண்டு படிக்கச் செய்து தண்டிக்க வேண்டும், என்ற ஆவல் ஏற்படுகிறது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.