1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Saturday, August 28, 2010

இன்டர்நெட் நட்பு... எதேல்லாம் தப்பு?

ரு காலத்தில் புறா வழியாகச் செய்தி அனுப்பிக்கொண்டு இருந்தார்கள். ஒரு புறாவை
ஒரு நேரத்தில் பாயின்ட் டு பாயின்ட் பஸ்போல மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது முக்கியக் குறைபாடு. இதுபோக, கட்டப்படும் நூலின் தரம், பசியோடு வட்டமிடும் பருந்துகள், புறாக் கறியை விரும்பும் அரசர்கள்(!) என்று பலவிதமான ரிஸ்க் இருந்தது.
தபால் வசதி உலகம் முழுதும் வந்த பின்னர், பேனா நட்பு என்ற புதிய அத்தியாயம் பிறந்தது. ஈரோடு கலா அக்கா, ஸ்டுடியோவில் ஒரு கையை இன்னொரு கையால் பிடித்தபடி புன்னகைக்கும் புகைப்படத்தைத் தனது பேனா தோழியான பாரிஸில் இருக்கும் பெக்கிக்கு அனுப்ப, ஈஃபில் டவருக்குக் கீழ் பெக்கி குட்டியூண்டு தெரியும்படி நிற்கும் புகைப்படம் திரும்பி வரும்.

உலகில் எத்தனை பேனா நண்பர்கள் இருந் தனர் என்ற புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை. ஆனால், இ-மெயில் தொழில்நுட்பம் இதைப் பெருமளவு குறைத்திருக்கும். இ-மெயில் என்பது மனிதர்களுக்கு இரண்டு கைகள்போல மாறி விட்டது. 'இது என்னோட போன் நம்பர். ஆனா, இ-மெயில்தான் பெஸ்ட் பிரதர்' என்று சொல்லும் பலரை நீங்கள் பார்த்திருக்கலாம்.

எஸ்.எம்.எஸ் என்ற குறுஞ்செய்தித் தொழில்நுட்பம் இ-மெயில் போலத்தான் என்றாலும், சுருக்கமான தகவல்களைத் தொடர்ந்து முன்னும் பின்னும் பகிர்ந்துகொள்ள வசதியானது. இ-மெயிலுக்கு அடுத்து கலக்கலாக வந்த சாட் தொழில்நுட்பம் இன்னும் அற்புதம். ஆன்லைனில் இருக்கும் நண்பனிடம், 'டேய், என்னடா பண்ற?' என்று கேட்க முடிகிறது.
சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவை மேற்கண்ட பல தொழில்நுட்பக்கூறுகளை ஒன்றாகத் தொகுத்துக் கொடுக்கிறது. இதனால் நட்பு வட்டத்துடன் தொடர்பில் இருக்கவும், புதிய தோழமைகளைக் கண்டறியவும் பெருமளவில் இந்தச் சமூக வலைதளங்கள் பயன்படுகின்றன. 

பலதரப்பட்ட நட்புகளை நிர்வகிப்பது எப்படி என்பதற்கான டிப்ஸ்:
முதலில் இ-மெயில்...
50 சதவிகித இ-மெயில்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது என்கிறது ஓர் ஆய்வு. முக்கியமாக, ஆங்கிலத்தில் எழுதும்போது முழு வாக்கியங்களையும் UPPER CASE எழுத்துக்களில் எழுதுவதைத் தவிருங்கள். அது நீங்கள் எழுத்தில் கத்துவது போன்ற உணர்வைக் கொடுக்கலாம். வார்த்தைகளின் தொனியில் கவனமாக இருங்கள். எழுதிய வார்த்தைகளில் கோபமும் எரிச்சலும் உங்களை அறியாமலேயே இருப்பதைக் கண்டறிய டோன்செக் (http://www.tonecheck.com/) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். நினைவிருக்கட்டும்... ஆறாதே இ-மெயிலால் சுட்ட வடு.

வதவதவெனக் கண்ணில் கிடைக்கும் பொன்மொழிகளையும், புகைப்படங்களையும், ஜோக்குகளையும் அனுப்பாதீர்கள். அது உங்களது நேரத்தையும், அவரது நேரத்தையும் சேர்த்துக் காலி செய்யும். அவசியம் தவிர, நண்பர் ஒருவருக்கு ஒரு நாளில் அதிகபட்சம் இரண்டு இ-மெயில் மட்டுமே அனுப்புங்கள். இதன்மூலம், அவரது இ-மெயில் பெட்டி நிறைந்து வழியாமல், கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். நீங்கள் மானாவாரியாக அனுப்பும் இ-மெயில்களால் கடுப்பாகி, உங்கள் இ-மெயில் விலாசத்தையே 'குப்பை' ( Spam ) என நட்பு வட்டம் குறித்து வைக்கக்கூடும். காரணம், அதிகமானவர்கள் அப்படிக் குறித்துவைத்தால், gmail, hotmail போன்ற இ-மெயில் சேவை தொழில்நுட்பங்கள் உங்கள் இ-மெயிலைத் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ மூடிவிடும் முகாந்தரம் உண்டு.
பல நண்பர்களுக்குப் பொதுவான இ-மெயில் அனுப்பும்போது, எல்லோருடைய விலாசங்களையும் To அல்லது CC (Carbon Copy) பகுதியில் கொடுப்பது விவேகமான செயல் அல்ல. யார் யாருக்கு அவர்கள் உங்களது மெயிலை ஃபார்வர்ட் செய்வார்கள் என்பது தெரியாது. இ-மெயில் விலாசங்களைச் சேகரித்து சகட்டு மேனிக்கு மார்க்கெட்டிங் செய்பவர்கள் கையில் அனைவரின் இ-மெயில் முகவரிகளும் கிடைத்து, நண்பர்களின் சாபத்துக்கு ஆளாக நேரிடலாம். அதற்குப் பதிலாக, உங்களுடைய இ-மெயில் விலாசத்தையே To பகுதியிலும் போட்டு, BCC (Blind Carbon Copy) பகுதியில் மற்ற அனைவரின் இ-மெயில் விலாசங்களும் கொடுங்கள். இப்படிச் செய்தால், எந்தக் கொம்பனாலும் இ-மெயில் விலாசங்களைத் திருட முடியாது.

இ-மெயில் அனுப்பிய உடனே, போனிலும் அழைத்து 'மச்சான், இ-மெயில் பார்த்தியா? என்ன அனுப்பியிருக்கேன்னா...' என்று ஆரம்பித்து, இ-மெயில் முழுவதையும் வாசித்துக் காட்டுவது அநாவசியம் + அநியாயம்.
இ-மெயிலின் கீழ்ப் பகுதியில் உங்களது மற்ற தொலைபேசி, வீட்டு முகவரி போன்ற தொடர்பு தகவல்களைக் கொடுப்பது சிறந்தது. 

சமூக ஊடக வலைதளங்களில் தொடர்புகளை நிர்வகிப்பது எப்படி? 
உங்களுக்குத் தெரியாதவர்களை உங்கள் நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொள்ளும் முன்னால், அவர் வில்லங்கமான ஆசாமியா, அல்லது போலியான profile போன்றவற்றை தீரப் பரிசோதித்து இணையுங்கள். நீங்கள் பகிர்ந்துகொள்ளும் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைவரும் பார்ப்பது மட்டுமன்றி, அவை நகல் எடுக்கப்பட்டு பல இடங்களில் சென்று சேரும் வாய்ப்பு இருக்கிறது. இதில் மிக மிக மிகக் கவனம் தேவை. அதிபர் ஒமாபா இதைப்பற்றி இளைஞர்களிடம் பேசுவதை இந்த உரலியில் பாருங்கள் http://www.youtube.com/watch?v=Awwp9BFfAY8
உருப்படி இல்லாத தகவல்களை, புள்ளிவிவரங்களை ஃபேஸ்புக் சுவரில் எழுதிவைப்பதைத் தவிர்க்க முயலுங்கள். நீங்கள் எழுதுவது எல்லாம், உங்கள் நண்பர்களின் பக்கங்களிலும் வரும் என்பதால், இதிலும் கவனம் அவசியம்.
பார்க்கும் தகவல்கள் ஏதாவது சுவாரஸ்யமானதாக இருந்தால், 'Like' செய்வது தவறு அல்ல. ஆனால், பார்க்கும் எல்லாவற்றையும் 'Like' செய்வது நல்லதல்ல.
பின்னூட்டங்கள் இடும்போதும் கவனத்துடன் இடுங்கள். கிண்டலாகவும் கோபமாகவும் பின்னூட்டங்கள் இடுவது தவறு என்று சொல்ல மாட்டேன். நீங்கள் பின்னூட்டம் இடும் குறிப்பிட்ட நண்பருடன் உங்களுக்கு நல்ல புரிதல் இருக்கலாம். ஆனால், நீங்களும் உங்கள் நண்பரும் தனி அறை யில் இல்லை என்பதை மனதில்கொள்ளுங்கள். அவரது நட்பு வட்டத்தில் உங்களைத் தெரியாத நபர்கள் இருக்கலாம். உங்களது நட்பு வட்டத்தில் அவரைத் தெரியாத நண்பர்கள் இருக்கலாம். உங்களது பின்னூட்டங்கள் உங்களைப்பற்றியோ, அல்லது நண்பரைப்பற்றியோ தவறான பிம்பத்தை ஏற்படுத்திவிடாமல் இருக்க வேண்டும். உங்களுக்கு இதில் லேசாகச் சந்தேகம் இருந்தால் அவருக்கு நேரடியாக பிரத்யேக மெயில் அனுப்புங்கள்.

இணைய நட்பை நிர்வகிப்பது எப்படி?
'முகநக நட்பது நட்பன்று' வள்ளுவம் சொல்கிறது வாழ்க்கை முழுதும் தொடரும் நட்பின் இலக்கணத்தை. பள்ளி, கல்லூரி, அலுவலகம், சமூகம் என அனைத்து நிலைகளிலும் நட்பு என்பது சமூக அமைப்பில் ஓர் உறவு என்ற அடையாளத்தைத் தாண்டி, சமூக குணநலனாகக் கருதப்படுகிறது. இந்த உலகத்தில் நட்பு இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அப்படி மக்களுடன் நெருங்கிப் பழகாமல் ஒட்டுதல் இல்லாமல் இடைவெளிவிட்டு ஒதுங்கி வாழ்பவர்களை 'ஆஸ்பர்ஜெர்' என்று வரையறுக்கிறது உளவியல். 

கை குலுக்கி, கன்னம் கிள்ளி, முதுகு தட்டி, கண்ணாமூச்சி ஆடி, சிறு வயதில் தோன்றுகிற நட்பு காலப்போக்கில் காலாவதியாகிவிடுகிறது. இப்போதெல்லாம் பக்கத்தில் இருக்கும் நண்பர்களைப் பார்க்க முடியாத பணிச் சூழலில் குறுஞ்செய்திகள், இ-மெயில்கள்தான் நட்பைக் காக்க உதவுகின்றன. முகத்துக்கு முகம் பார்த்து, தோள் தாங்கி, மடி சாய்ந்து, சிரித்து வளர்த்த இந்த நட்பையே நம்மால் சரியாக நிர்வகிக்க முடியாதபோது, உலகின் எங்கோ ஒரு மூலையில் இணை யம் என்ற கலங்கிய குட்டையில் தன் முகம் மறைத்து நண்பன் என்று நம்மிடம் அறிமுகப்படுத்திக்கொள்ளும் மனிதர்களையும், உண்மையிலேயே அன்புக்காக ஏங்கும் இணைய இதயங்களையும் எப்படி இனம் கண்டுகொள்வது?
பொதுவாக, இணைய நட்பு என்பதை உண்மையான நண்பர்கள், பிசினஸ் அசோஸியேட்ஸ், க்ளையன்ட்கள் - நேற்று, இன்று, நாளை, முன்னாள் நண்பர்கள், சமூக வலைதள நண்பர்கள், சர்க்கிள் ஆஃப் ஸ்பியர், தெரியாதவர்கள், பொது விருப்பங்கள் என்று எட்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
ஒவ்வொரு இணைய நட்பு வட்டத்தையும் எப்படி நிர்வகிக்கலாம்


உண்மையான நண்பர்கள் 

உங்களைப்பற்றி அறிந்தவர்கள் என்ற பெர்சனலான எல்லைக்குள் வருபவர்கள். அவர்களைப்பற்றி நீங்களும் முழுவதுமாக அறிந்திருப்பீர்கள். தினமும் ஒரு முறையாவது இவர்களுக்கு நலம் விசாரித்தோ, பணிபற்றி விசாரித்தோ, குடும்பம்பற்றியோ அக்கறையுடன் நலம் விசாரித்து மெயில்கள் அனுப்புவது நலம்.
கவனிக்க...
இவர்கள் நெருக்கமான நண்பர்கள். ஆதலால் ஃபார்மலாக மெயில் அனுப்புவது தேவை இல்லை. அவரை நேரில் சந்தித்தால், எப்படி உரையாடுவீர்களோ அந்தத் தொனியிலேயே மெயில்கள் இருப்பது உங்கள் அன்பு மனதை அவர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும்.

பிசினஸ் அசோஸியேட்ஸ்
வியாபாரம் சம்பந்தமாக உங்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் இவர்கள். ஒரு நாளில் மிக அதிகமாக இ-மெயில் பரிவர்த்தனை இவர்களுடன்தான் நடக்கும் என்பதால், ஒவ்வொரு இ-மெயில் அனுப்பும் போதும் கவனமாக இருக்க வேண்டும். கவனம் இன்றி சிறு தவறு நடந்தாலும் உங்கள் உறவு பாதிக்கப்படும். விளைவாக பிஸினஸும் பாதிக்கப்படும். 

கவனிக்க...
ஒவ்வொரு முறை மெயில் அனுப்பும்போதும் விளித்தல் முறை சரியாக இருக்க வேண்டும். ஃபார்மலாக இருப்பது மிகவும் முக்கியம்.
பெயர், பதவி சரியாகக் குறிப்பிட வேண்டும்.
அவ்வப்போது ஃபாலோ-அப் மேற்கொள்வது நல்லது.
முக்கியமான விஷயங்கள் தாமதமானால் 'ரிமைண்டர்'கள் அனுப்புவது நலம்.

க்ளையன்ட்டுகள் - நேற்று, இன்று, நாளை
எப்போதும் க்ளையன்ட்டுகளுடன் சுமுக உறவுடன் இருப்பது முக்கியம். காரணம், இன்று இருக்கும் வாடிக்கையாளர்கள், நேற்று இருந்த வாடிக்கையாளர்கள் மூலம் வந்தவர்கள். நாளை வரப்போகும் வாடிக்கையாளர்கள், இன்று இருக்கும் வாடிக்கையாளர்கள் மூலம் வருபவர்கள். 

கவனிக்க..
நம்மோடு வியாபாரத்தில் இருந்த முந்தைய நிறுவனங்களில் சில அதிகாரிகள் இடம் மாறியிருக்கலாம். தொடர்புகள் அற்றுப்போய் சில காலத்துக்குப் பிறகு மீண்டும் தொடர்புகொள்ளும்போது அவர்களின் பதவியை மட்டும் பொதுவாகக் குறிப்பிட்டு, இ-மெயில்கள் அனுப்பலாம்.
உங்கள் நிறுவனத்தில் யார் யார், எங்கெங்கே என்ன பதவியில் இருக்கிறார்கள் என்பதை இன்று இருக்கும் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவுபடுத்தும்விதமாக 'இன்ஃபர்மேஷன் போர்ட்டல்'கள் வைத்திருப்பது உங்கள் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.
தகவல் கேட்டு மெயில் அனுப்பினால் அடுத்த 24 மணி நேரங்களுக்குள் விவரங்களை அனுப்பிவைப்பது நன்று.

முன்னாள் நண்பர்கள்
சில காலம் பழகிவிட்டு, சூழ்நிலைகளால் நம்மைவிட்டுப் பிரிந்தவர்கள். இவர்கள் எல்லோரும் இந்த வகை வட்டத்தில் வருபவர்கள்.

கவனிக்க...
உங்கள் நட்பின் ஆழத்தைப் பொறுத்து மெயில்கள் அனுப்பலாம்.
அவர் என்றோ ஒருநாள் உங்களுக்கு இழைத்த தவறை நினைவுபடுத்தும்விதமாக இ-மெயில்கள் அனுப்புவதைத் தவிர்க்கவும்.
இவ்வளவு நாள் ஒரு போன்கூட செய்யாதவர் திடீரென்று உங்கள் இ-மெயில் கேட்டால், அலுவலகப் பயன்பாட்டுக்கு உள்ள இ-மெயில் முகவரியைத் தருவதைவிட பெர்சனல் இணைய முகவரியைத் தருவது நலம்.

சமூக வலைதள நண்பர்கள்
ஆர்குட், ஃபேஸ்புக், டிவிட்டர், லிங்கட் என சமூக வலைதளங்களில் உலவும் நண்பர்கள் என்று சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. உங்கள் நண்பர், அவருடைய நண்பர், நண்பரின் நண்பர் என்று உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களும் கைகுலுக்குவதால் இந்த நட்பு வட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கவனிக்க...
முகம் தெரியாத நண்பர்களுடன் வெகு நேரம் சாட் செய்ய வேண்டாம்.
நீங்கள் இடும் தகவல்கள் அனைவராலும் உடனுக்குடன் படிக்கப்படும் என்பதால், தகாத வார்த்தைகள் உபயோகிப்பதைத் தவிர்க்கவும். அதேபோல ஒரு நண்பரைப்பற்றி இன்னொருவரின் 'ஸ்கிராப்'பில் போஸ்ட் செய்ய வேண்டாம்.

சர்க்கிள் ஆஃப் ஸ்பியர்
இதை இப்படியும் சொல்லலாம். தெரிந்தவர்கள், ஆனால் நண்பர்கள் அல்ல. ஏதோ ஒரு விழாவில், அல்லது பிசினஸ் மீட்டிங்கில் அல்லது காலேஜ் கல்ச்சுரல்ஸில் சந்தித்திருப்பீர்கள். டைம்பாஸுக்காகப் பேச்சு வளர்ப்பீர்கள். சும்மானாச்சுக்கும் 'உங்கள் இ-மெயில் ஐ.டி-யைக் கொடுங்களேன்' என்பீர்கள். அவரும் தருவார். நீங்களும் தருவீர்கள். உங்களுக்கு அவரைத் தெரியும். அவருக்கு உங்களைத் தெரியும். ஆனால், 'உண்மையில்' ஒருவரைப்பற்றி ஒருவர் ஆழமாகத் தெரிந்துவைக்காமல் இருப்பீர்கள்.

கவனிக்க...
ஒன்றுக்கும் உதவாத மெயில்களை 'ஜஸ்ட் லைக் தட்' ஃபார்வேர்டு செய்வார்கள். அதை நீங்களும் ஃபார்வேர்டு செய்து நேரத்தை வீணாக்க வேண்டாம்.
தெரியாதவர்கள்
எல்லா விளம்பர நிறுவனங்களிடத்திலும் உங்களின் இ-மெயில் முகவரி இருக்கும். இதை வாங்கிக்கொள்ளுங்கள், அதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று மெயில்களை அனுப்புவார்கள். இவர்கள் இந்த வகைக்குள் வருபவர்கள்.

கவனிக்க...
முடிந்தவரை இப்படிப்பட்ட இ-மெயில்களுக்குப் பதில் அனுப்பாமல் இருப்பது நல்லது.

பொது விருப்பங்கள்
ஷகிராவின் பாப் பாடல்களில் உங்களுக்கு விருப்பம் இருக்கலாம். அல்லது நேஷனல் ஜியாக்ரஃபியின் போட்டோக்களுக்கோ ரசிகராக இருக்கலாம். உங்களைப் போன்றே இதே அலைவரிசையில் இருக்கும் நபர்கள் இணையத்தில் இருப்பார்கள். இவர்களை எல்லாம் 'கம்யூனிட்டி' என்பதற்குக் கீழே கொண்டு வர முடியும். 

கவனிக்க...
இத்தகைய கம்யூனிட்டிகளில் இணைவது உங்களுக்குத் துறை சார்ந்த நெட்வொர்க்கை அதிகமாக்கும்.
நன்றி : விகடம்.காம் 

Thursday, August 26, 2010

மரங்களை வெட்டுங்கள்..


 
மரங்களை வெட்டுங்கள்..
உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.
 
மண்ணின் வில்லன்

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்'(வேலிகாத்தான் மரம்) தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'


ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.
 
இதன் கொடூரமான குணங்கள்

இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!


இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.


தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.
 
உடம்பு முழுதும் விஷம்

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.


காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.


அறியாமை


நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.


கேரளாவின் விழிப்புணர்வு


நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??


ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.


நல்ல மரம் ஆரோக்கியம்


வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .


சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?


இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

Wednesday, August 25, 2010

வருங்காலத் தொழில்நுட்பம்

-காமர்ஸ், சமூக ஊடகம் என இணைய உலகில் புதிய பிசினஸ் மாடல்கள் வந்து
பில்லியன்களைக் குவிப்பதை கலிஃபோர்னியாவின் தங்கத் தேடலுக்கு (Gold Rush) நிகரானதாக சென்ற வாரக் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன். ஏழு வருடங்களே நீடித்த தங்கத் தேடல் மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியைக் கொடுத்து இருந்தாலும், தங்கத்தால் வந்த நேரடிச் செல் வம் சிலரைக் கொழுத்த பணக்காரர்களாக்க, தங்கம் தேடி வந்த பலர், கடுமையான உழைப்புக்குப் பின்ன ரும் கிட்டத்தட்ட வெறுங்கையோடு திரும்பிப் போனதுதான் உண்மை. அதே நேரத்தில், தங்கம்தேடப் போனவர்களால் கோடாரி, சுத்தியல் உள்ளிட்ட இத் யாதி கருவிகளின் விற்பனை குறிப்பிடத்தகுந்த அள வுக்கு வெற்றி பெற்றது. பரவலாக இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கும் ஜீன்ஸ் பேன்ட், தங்கத் தேடலின்போது ஏற்பட்ட தற்செயல் தொழில்வெற்றி தான்.

24 வயதான Levi Strauss நியூயார்க்கில் இருந்து புறப்பட்டு கலிஃபோர்னியா வந்தது, தங்கம் தேடி உழைக்கும் தொழிலாளர்களுக்கு, அவர்கள் வேலை பார்க்கும் சுரங்கங்களின் அருகே கூடாரம் போட்டு உலர் பழங்களை விற்பதற்காகத்தான். கூடாரம் அமைக் கக் கொண்டுவந்த முரட்டுத் துணி கால்சராய் தைக் கப் பயன்பட்டு, அதன்மூலம் Levis என்ற மிகப் பிரபல மான பிராண்ட் உருவானது குருட்டு அதிர்ஷ்டமே. இணையத்திலும், இது போன்ற வெற்றி (மற்றும் தோல்வி) கதைகளுக்குக் குறைவு இல்லை.
சென்ற வாரத்தில் பயனீட்டாளர்களின் இணையப் பயன்பாட்டுத் தகவல்களைச் சேகரித்து, அதில் இருந்து அவர்களின் ஆளுமையையும் அவர்களுடனான வியாபார நிகழ்வுகளில் இருக்கும் சாதக, பாத கங்களையும் கண நேரத்தில் அலசி ஆராய்ந்து கணிக்கும் இணைய தொழில்நுட்பங்கள் தொடர்ந்து பெருகி வருவது கவலைக்கு உரியது.

இது எப்படி வேலை செய்கிறது என்பதைப் பார்க்கலாம்.
திருச்சிக்காரரான பிரபுவுக்கு வேலை கோயம்புத்தூரில். பணிபுரியும் அலுவலகம் தவிர, வீட்டிலும் இணைய வசதிகொண்ட கணினி மூலம் வலைதளங்களை மேய்வது உண்டு. அவ்வப்போது திருச்சி செல்கையில் பிரவுசிங் சென்டர் செல்வதும் வழக்கம். இணையத்தில் இ-மெயில் தவிர, ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் சில வலைப்பதிவுத் தளங்களில் தொடர்ந்து மேய்வது உண்டு. இதோடு, நண்பர்கள் யாராவது அனுப்பும் வலைதள லிங்குகளைச் சொடுக்கி அவற்றைப் படித்து, பின்னூட்டங்கள் இடுவதும் பிரபுவின் வழக்கம்.

பிரபு தமது வலைதளத்துக்கு முதல்முறை வந்து விட்டு, மீண்டும் வரும்போது அவரது வசதிக்காகஎன வலைதளங்கள் சில தகவல்களை Cookie எனப் படும் குட்டி சைஸ் கோப்புகளில் சேமித்துவைப் பது வழக்கம். ஆனால், இந்த Cookieகள் அனைத் தையும் ஒரு மென்பொருளால் படிக்க முடிந்தால்? அதுதான் இந்தத்தொழில்நுட்பத்தின் அடிப்படை!

பல்வேறு கணினிகளில் இருந்தும், வெவ்வேறு ஊர்களில் இருந்தும் பிரபு வலைதளங்களுக்குச் சென்றாலும், அவரது வலையலசல் வரலாற்றை (Browsing History) அலசிப்பார்த்து அவரைப்பற்றிய விவரங்களைத் தொகுத்தெடுத்து பிரபுவைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைக் கணிக்க முடியும். 'இவர் 23 - 28 வயதுடைய, கோயம்புத்தூரிலும்திருச்சி யிலும் நாட்களைக் கழிக்கும் பட்டதாரி. புத்தகங்கள் படிப்பதிலும், திரைப்படங்கள் பார்ப்பதிலும் ஆர் வம் அதிகம். கடந்த 6 முதல் 18 மாதங்களுக்குள் டெல்லிக்குப் பயணித்திருக்கிறார்!' என்று தோராயமாகவும் துல்லியமாகவும் பிரபுவைப் பற்றிய தகவலைச் சலித்துச் சொல்ல முடியும். பிரபு இதுவரை சென்றிருக்காத வலைதளங்கள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அவர் வருகை தரும்போது மிகக் குறிப்பிட்ட (Targeted) செய்திகளையும் விளம்பரங்களையும் கொடுக்க முடியும். இப்போது பரவலாக வலைதளங்களில் காணப்படும் ஃபேஸ்புக்கின் Like இணைப்புகளின் பின்னணி மற்றும் நோக்கம் இதுதான். பயனீட்டு அனு பவத்தைச் செம்மைப்படுத்துவற்கு மட்டும் இதைச் செய்தால் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், இந்தத் தொழில்நுட்பம் அதற்காகப் பயன்படாமல், கிட்டத்தட்ட பயனீட்டாளர்களை உளவு பார்க்கும் வேலை செய்வதுதான் பிரச்னையே!

உதாரணத்துக்கு, பிரபு கிரெடிட் கார்டு ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம். கிரெடிட் கார்டைக் கொடுக்கும் நிறுவனம் பிரபு தமது வலைதளத்தில் கார்டுக்கான விண்ணப்பத்தில் விவரங்களைக் கொடுத்துக்கொண்டு இருக்கும் அதே வேளையில், பிரபுவைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து, அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளலாம்; நிராகரிக்கலாம் அல்லது அதிக வட்டிக்கான கார்டைக் கொடுக்கலாம். உதாரண மாக, பெண்ணுக்குப் பார்த்து இருக்கும் மாப்பிள்ளைப் பையனின் வண்டவாளங்களையோ பையனுக்குப் பார்த்து இருக்கும் பெண்ணின் சேட்டைகளையோ நொடியில் கண்டுபிடிப்பது சாத்தியம். மேட்ரிமோனியல் வலைதளங்கள் மேற்கண்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தகவல் சேகரித்துப் பெண்/ஆண் வீட்டாருக்கு விற்க முடியும்.

வேலைவாய்ப்பு, உயர் கல்வி போன்ற ஒவ்வொரு துறையிலும் இப்படி எடுக்கப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தத் தொடங்கினால், பயனீட்டாளர்களின் பிரைவஸி அதோகதி என்ப தால், இந்தத் தொழில்நுட்பத் தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற குரல் இணைய உலகில் கேட்கத் தொடங்கி இருக்கிறது.

டிவிட்டர் வேகமாக வளர்ந்து வருவதை அவர்களின் ஜூன் மாதப் புள்ளிவிவரத்தில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. 110 சதவிகிதம் அதிகமாகப் பயனீட்டாளர் எண்ணிக்கையிலும், அனுப்பப் படும் டிவிட்டுகளிலும் வளர்ச்சி இருப்பதற்குக் காரணம், ஆசியாவில் இருந்து இணைபவர்களால்தான் என்பதை, தமிழ் கூறும் நல்லுலகில் பதிவர்களில் இருந்து, பலான தளங்கள் வரை டிவிட்ட ஆரம்பித்து இருப்பதில் இருந்து தெரியவருகிறது.

இதைக் கொண்டாடும் வகையில், டிவிட் ஸ்டைல் சுருக் விவரங்கள் சில:
இணையப் பயனீட்டையே மாற்றிவிடும் என்று ஏக பில்ட் அப் கொடுத்துத் தொடங்கப்பட்ட கூகுள், வேவ் தொழில்நுட்பத்தை நிறுத்திக்கொள்ளப்போவ தாக அறிவிப்பு. வேவின் பிறப்பையும் இறப்பையும் பற்றிய விக்கி உரலி http://en.wikipedia.org/wiki/Google_Wave
பயனீட்டாளர்களின் ஆதரவு அதிகம் இல்லை என்பதால் வேவ் தொழில்நுட்பத்தை நிறுத்தப்போவதாகச் சொல்லி இருந்தாலும், ரகசியமாக அவர்கள் தயாரித்தபடி இருக்கும் Google Me சமூக ஊடகத் தொழில்நுட்பத்தை வெளியிடும் வகையில் இதைச் செய்திருக்க வேண்டும் என்பது எனது யூகம்.
அடுத்து என்ன? பஸ்ஸையும் (buzz.google.com) காலி செய்துவிடுவார்களா? பார்க்கலாம்!
ஆப்பிளின் iPad-க்குப் போட்டியாக Dell நிறுவனம் Streak என்ற கணினிக் குளிகை சாதனத்தை இந்த வாரம் வெளியிடுகிறது. யாராவது வாங்கிப் பயன்படுத்தினால், பின்னூட்டம் கொடுங்கள், ப்ளீஸ்!
 நன்றி : விகடன்.காம்

Sunday, August 8, 2010

சிங்கப்பூர்

Republik Singapura
新加坡共和国
சிங்கப்பூர் குடியரசு
சிங்கப்பூரின் கொடி

குறிக்கோள்
Majulah Singapura
(மலாய் "சிங்கப்பூர் முன்னோக்கி")
நாட்டுப்பண்
முன்னேறட்டும் சிங்கப்பூர்
Location of  சிங்கப்பூரின்
தலைநகரம்
பெரிய நகரம்
சிங்கப்பூர் 1
1°17′N, 103°51′E
ஆட்சி மொழி(கள்) மலாய் , ஆங்கிலம், மேண்டரின், தமிழ்
அரசு பாராளுமன்ற குடியரசு
- அதிபர் செல்லப்பன் இராமநாதன்
- பிரதமர் லீ எசிய லூங்
விடுதலை
- ஒருதலைபட்ச பிரகடனம் (ஐ.இ. இடமிருந்து) ஆகஸ்டு 31, 1963
- அதிகாரப்பூர்வமாக ஐ.இ இடமிருந்து( மலேசியாவின் மாநிலமாக) செப்டம்பர் 16, 1963
- மலேசியாவிடமிருந்து ஆகஸ்டு 9, 1965
பரப்பளவு
- மொத்தம் 699 கிமீ² (190வது)
270 சது. மை
- நீர் (%) 1.444
மக்கள்தொகை
- ஜூலை 2005 மதிப்பீடு 4,326,000 (120வது)
- 2000 குடிமதிப்பு 4,117,700
மொ.தே.உ
(கொஆச (ppp))
2006 கணிப்பீடு
- மொத்தம் $123.4 பில்லியன் (57வது)
- நபர்வரி $29,900 (22வது)
ம.வ.சு (2003) 0.907 (உயர்) (25வது)
நாணயம் சிங்கப்பூர் வெள்ளி (SGD)
நேர வலயம் சி.சீ.நே (ஒ.ச.நே.+8)
- கோடை (ப.சே.நே.) இல்லை (UTC+8)
இணைய குறி .sg
தொலைபேசி +652
1. சிங்கப்பூர் ஒரு நகர நாடாகும்.
2. 02 மலேசியாவில் இருந்து அழைக்கும் போது
சிங்கப்பூர் குடியரசு (சீனம்: 新加坡共和国, Xīnjīapō Gònghéguó; மலாய்: Republik Singapura; ஆங்கிலம்: The Republic of Singapore) தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. சிங்கப்பூர் தீவிற்கு வடக்கில் மலேசியாவும், தெற்கில் இந்தோனீசிய ரியாவு (Riau) தீவுகளும் உள்ளன.
சிங்கப்பூர் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியால் 1819ல் ஆக்கிரமிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்களால் சிறிது காலம் ஆட்சியில் இருந்த சிங்கப்பூர் மறுபடியும் 1945ல் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்து பிறகு 1963ல் மலேசியாவோடு இணைக்கப்பட்டது. ஆகஸ்ட் 9, 1965 அன்று மலேசியாவில் இருந்து பிரிந்து, விடுதலை பெற்று தனி குடியரசு நாடாக உருவானது.
மிகவும் சிறிய பரப்பளவு கொண்ட சிங்கப்பூர், தென்கிழக்குஆசியாவில் மிகச்சிறிய, மற்றும் உலகிலேயே மூன்றாவது மிகச்சிறிய நாடாகும். எனினும் அன்னியர் செலவாணியில் சிங்கபூரிடம் அமெரிக்க வெள்ளி 172 பில்லியன் $ உள்ளது. விடுதலைக்கு பின் நடந்த பல்வேறு பொருளாதார மாற்றங்களினாலும், அரசின் துணையோடு தன் உள்கட்டுமானத்தினை தரப்படுத்திக் கொண்டதாலும், சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கை தரம் பல்மடங்கு உயர்ந்துள்ளது.

வரலாறு

பெயர்க்காரணம்

சிங்கப்பூர் சிங்கம் +ஊர் சிங்கப்பூர் அதாவது சிங்கத்தின் ஊர் என்ற தமிழ் பொருளை கொண்டதும் ஆகும் சிங்கப்பூர் என்ற பெயர் சிங்கப்பூரா என்ற மலாய் சொல்லிருந்து மருவியதாகவும் கூறப்படுகிறது. மலாய் சொற்களான சிங்கா (சிங்கம்) மற்றும் பூரா (ஊர்) சேர்ந்து சிங்கப்பூரா என்று அழைக்கப்படுகிறது. மலாய் வரலாற்றின் படி 14ம் நூற்றாண்டு சுமாத்திரா மலாய் இளவரசர் சாங் நிலா உத்தமா, ஒரு கடும் புயலின் போது இந்த தீவில் ஒதுங்கினார். அப்போது அவர் சிங்கம் போல ஒரு மிருகத்தை பார்த்து, சிங்கம் என்று தவறுதலாக நினைத்துக்கொண்டு சிங்கபூரா என்று அழைத்ததாக வரலாற்றுக்கதையும் உண்டு .

முந்தைய வரலாறு

சிங்கப்பூரின் வரலாறு 14 ஆம் நூற்றாண்டிலிருந்து குறிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன் சிங்கப்பூரும் மலேசியாவும் கடாரம் கொண்ட சோழ மண்டலத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கலாம் என்று தமிழ்நாட்டின் வரலாறு காட்டுகிறது. 14ம் நூற்றாண்டில் அது துமாசிக் என்ற பெயர் கொண்ட நகரமாக காட்சியளித்தது. அது சுமாத்திராவில் இயங்கிய ஸ்ரீ விஜய சாம்ராச்சியத்தின் ஆட்சிக்கு உட்பட்டது. சிங்கை தீவில் ஒரு நகரம் இருந்தது என்றும் அந்த நகரம் தென்கிழக்காசியாவில் ஒரு முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது என்று மலாய் மக்களின் வரலாறு கூறுகிறது.
ஸ்ரீவிஜய பேரரசு மறைந்த பிறகு, துமாசிக் மற்ற அரசுகளால் தாக்கப்பட்டது. ஜாவாவில் இருந்த மாஜாபாஹித் பேரரசு, தாய்லாந்தில் இயங்கிய அயுத்திய அரசு போன்றவை அந்த நகரை தம் ஆட்சிக்குள் கொண்டு வர முயன்றன. தாய்லாந்தின் அயுத்திய அரசு குறைந்தது ஒரு முறை துமாசிக் தீவைத் தாக்க முயன்று தோல்வி அடைந்தது என்று வரலாறு காட்டுகிறது. அந்நேரத்தில் - 15ம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் - துமாசிக் நகருக்கு "சிங்கப்பூரா" என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது.

குடியேற்றவாத ஆட்சி



தொமஸ் ஸ்டேம்ஃபர்ட் ராஃபிள்ஸ்
1819 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள், சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ் என்பார் தலைநிலப்பகுதியில் வந்து இறங்கினார். இப்பகுதியின் புவியியல் அமைவிட முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட அவர், வணிக நிலையொன்றை அமைப்பதற்காக 1819 பெப்ரவரி மாதம் 6 ஆம் தேதி சுல்தான் ஹுசேன் ஷாவுடன் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி சார்பில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். இவ்வொப்பந்தப்படி சிங்கப்பூரின் தெற்குப்பகுதியில் வணிக நிலையொன்றையும், குடியேற்றம் ஒன்றையும் அமைக்கும் உரிமையைப் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி பெற்றுக்கொண்டது. ஆகஸ்ட் 1824 ஆம் ஆண்டுவரை சிங்கப்பூர் மலே ஆட்சியாளரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவே இருந்தது. ஆகஸ்ட் 1824ல் பிரித்தானியா முழுத்தீவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது சிங்கப்பூர் ஒரு பிரித்தானியக் குடியேற்றநாடு ஆகியது. சிங்கப்பூரிலிருந்த இரண்டாம் வதிவிட அதிகாரியான ஜான் குரோபுர்ட் என்பவரே சிங்கப்பூரை பிரித்தானியாவுக்கு உரியதாக்கியவர். இவர் 1824 ஆகஸ்ட் 2 ஆம் தேதி சுல்தான் ஹுசேன் ஷாவுடன் ஒப்பந்தமொன்றைச் செய்தார். இதன் அடிப்படையில் சுல்தான் தீவு முழுவதையும் பிரித்தானியாவுக்குக் கையளித்தார். இதுவே நவீன சிங்கப்பூரின் தொடக்கம் எனலாம். ராபிள்சின் உதவி அதிகாரியான வில்லியம் பர்குகார் (William Farquhar) சிங்கப்பூரின் வளர்ச்சியையும், பல்லின மக்களின் உள்வருகையையும் ஊக்கப்படுத்தினார். இந்த உள்வருகை கட்டுப்பாடற்ற வருகுடியேற்றக் கொள்கை காரணமாக ஏற்பட்டது. 1856 ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானிய இந்திய அலுவலகம் சிங்கப்பூரை ஆட்சிசெய்தது. ஆனால் 1867 ஆம் ஆண்டில், சிங்கப்பூர், மக்கள் பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்ற நாடாக, பிரித்தானிய அரசரின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டது. 1869 ஆம் ஆண்டளவில் சுமார் 100,000 மக்கள் இத்தீவில் வாழ்ந்தனர். சிங்கப்பூரின் முதலாவது நகரத் திட்டமிடல் முயற்சி ஒரு பிரித்தாளும் உத்தியாகவே மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டப்படி தீவின் தெற்கு பகுதியில் வெவ்வேறு இன மக்கள் தனித்தனிப் பகுதிகளில் குடியேற்றப்பட்டனர்.
சிங்கப்பூர் ஆறு, பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த வணிகர்களும், வங்கியாளர்களும் நிறைந்த பகுதியாக விளங்கியது. சீன, இந்தியக் கூலித் தொழிலாளர்கள் படகுகளில் பொருட்களை ஏற்றியிறக்கும் வேலை செய்துவந்தனர். மலாயர்கள் பெரும்பாலும் மீனவர்களாகவும், கடலோடிகளாகவும் இருந்தனர். அராபிய வணிகரும், அறிஞர்களும் ஆற்றுக் கழிமுகத்தின் தென்கிழக்குப் பகுதியில் வாழ்ந்தனர். அக்காலத்தில் மிகவும் குறைவாகவேயிருந்த ஐரோப்பியக் குடியேற்றக்காரர் கானிங் ஹில் கோட்டைப் பகுதியிலும், ஆற்றின் மேல் பகுதிகளிலும் வாழ்ந்தனர். ஐரோப்பியரைப் போலவே இந்தியர்களும் தீவின் உட்பகுதியிலேயே குடியேறினர். இன்று சின்ன இந்தியா என்று அழைக்கப்படும் பகுதி இருக்கும் இடமே இது. விடுதலைக்குப் பின்னர் 1960களில் பெருமெடுப்பிலான மீள்குடியெற்ற நடவடிக்கைகளின்போது அறிபப்பட்டது தவிர, அக்காலத்தின் நாட்டுப்புறத் தனியார் குடியேற்றங்கள் பற்றி மிகக்குறைவாகவே அறியவருகிறது.

உலகப்போர்

பினாங்கு, மலாக்கா ஆகிய நகரங்களுடன் சிங்கப்பூர் நீரிணைக் குடியேற்றங்களின் (Straits Settlements) ஒரு பாகமாக இருந்தது. யப்பானியருடைய எழுச்சிக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே அவர்கள் வேகமாகத் தமது படைகளைப் பெருக்கிவருவதைப் பிரித்தானியா அறிந்திருந்தது. தென்கிழக்காசியாவில் இருந்த தமது சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக சிங்கப்பூரின் வட முனையில் கடற்படைத் தளம் ஒன்றை அமைப்பதற்குப் பிரித்தானியா முடிவு செய்திருந்தது. ஆனால் ஜேர்மனியுடன் ஏற்பட்ட போரினால் போர்க் கப்பல்களையும், தளவாடங்களையும் ஐரோப்பாவுக்குக் கொண்டுவரவேண்டி இருந்ததனால் இத் திட்டம் நிறைவேறவில்லை. இரண்டாம் உலகப் போரின் போது யப்பானியப் படைகள் மலாயாவைக் கைப்பற்றிக் கொண்டன. அப்படைகள் சிங்கப்பூரைத் தாக்கியபோது, பெரும்பாலான தமது படைகளை ஐரோப்பாவுக்கு அனுப்பிவிட்டுக் குறைந்த படைபலத்துடன் இருந்த பிரித்தானியர் 6 நாட்களில் தோல்வியடைந்ததுடன், புகமுடியாதது என்று சொல்லப்பட்ட கோட்டையையும் 1942 பெப்ரவரி 15 ஆம் தேதி யப்பானியத் தளபதி தொமோயுக்கி யாமாஷித்தாவிடம் (Tomoyuki Yamashita) ஒப்படைத்துச் சரணடைந்தனர். இத்தோல்வியை "பெரும் இழப்பு" என்றும் "பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய சரணாகதி" என்றும் அப்போதைய பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் குறிப்பிட்டார். சிங்கப்பூரின் கடற்படைத் தளத்தை யப்பானியர் பயன்படுத்தாமல் இருப்பதற்காக, அது யப்பானியரிடம் வீழ்ச்சியடையு முன்பே அழிக்கப்பட்டுவிட்டது. யப்பானியர் சிங்கப்பூரின் பெயரை "ஷோவாவின் காலத்தில் பெறப்பட்ட தெற்குத் தீவு" என்னும் யப்பானியத் தொடரைச் சுருக்கி "ஷொனான்டோ" என மாற்றினர். உலகப் போரில் யப்பானியர் தோல்வியுற்ற ஒரு மாதத்தின் பின்னர் 1945 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் தேதி சிங்கப்பூர் மீண்டும் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.

தற்போதைய சிங்கப்பூர்



சிங்கப்பூர் துறைமுகம்
1959 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பிரித்தானியப் பேரரசினுள் ஒரு தன்னாட்சி பெற்ற நாடானது. யூசோஃப் பின் இசாக் என்பவர் நாட்டுத் தலைவராகவும், லீ குவான் யூ பிரதமராகவும் ஆயினர். 1963 ஆகஸ்டில் சிங்கப்பூர் ஒருதலைப் பட்சமாகத் தன்னை முழு விடுதலைபெற்ற நாடாக அறிவித்துக் கொண்டது. 1963 ஆம் ஆண்டு செப்டெம்பரில் மலாயா, சாபா, சரவாக் ஆகியவற்றுடன் சேர்ந்து மலேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது. இரண்டு ஆண்டுகள் கழித்து சிங்கப்பூரில் ஆட்சியிலிருந்த மக்கள் செயர் கட்சிக்கும் கோலாலம்பூரில் இருந்த மத்திய அரசுக்கும் இடையில் ஏற்பட்ட கொள்கை வேறுபாடுகள் காரணமாக 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி சிங்கப்பூர், மலேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி இறைமையுள்ள நாடானது. யூசோப் பின் இஷாக் சிங்கப்பூரின் முதலாவது தலைவர் ஆனார். லீ குவான் யூ பிரதமராகத் தொடர்ந்தார்.
சிங்கப்பூர் தன்னிறைவு பெற முயன்ற வேளையில், பெருமளவிலான வேலையின்மை, வீட்டுப் பற்றாக்குறை, நிலம் மற்றும் இயற்கை வளப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை அந் நாடு எதிர் நோக்கவேண்டியிருந்தது. லீ குவான் யூ பிரதமராக இருந்த, 1959 தொடக்கம் 1990 வரையான காலப்பகுதியில் பரவலான வேலையில்லாப் பிரச்சினையைச் சமாளித்ததுடன், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திப் பெருமளவிலான வீடமைப்புத் திட்டங்களும் அமைக்கப்பட்டன. இக் காலத்திலேயே நாட்டின் பொருளாதார உள் கட்டமைப்புகள் வளர்ச்சியடைந்தன; இன முரண்பாடுகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன; ஆண்களுக்கான கட்டாய படைத்துறைச் சேவையே அடிப்படையாகக் கொண்ட ஒரு சுதந்திரமான தேசிய பாதுகாப்பு முறை உருவாக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் உலகிலேயே செல்வம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக மாறியது. அதன் GDP per capita ஐரோப்பிய நாடுகள் பலவற்றைவிட அதிகமாக இருக்கிறது. சிங்கப்பூரின் துறைமுகம் உலகில் அதிக வர்த்தகக் கப்பல்களைக் காணும் ஒன்று.

பண்பாடு

சிங்கப்பூர் பண்பாடு ஒரு கலப்புப் பண்பாடு. மலாய் மக்கள், சீனர்கள், இந்தியர்கள், அரபு நாட்டினரின் பண்பாடுகள் பின்பற்றப்படுகின்றன.

மக்கள்

ஜூன் 2006 படி சிங்கப்பூரின் மக்கள் தொகை 4.48 மில்லியன். இதில் 3.6 மில்லியன் மக்கள் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமம் பெற்றவர்கள்.

மதம்

சிங்கப்பூர் பல மதங்கள் கொண்ட ஒரு நாடு. 51% சிங்கப்பூர்வாசிகள் பௌத்தம் மற்றும் டாவோயிசம் பின்பற்றுகின்றனர். 15% மக்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் கிறித்துவத்திலும், 16% மக்கள், மலாய் மக்கள் இசுலாம் மதத்தினைப் பின்பற்றுகின்றனர். சிறுபான்மை மக்கள் பலர் இந்து சமயத்தையும், சீக்கிய சமயத்தையும் பின்பற்றுகின்றனர்.

மொழி

சிங்கப்பூரின் தேசிய மொழி மலாய். சிங்கப்பூரின் தேசிய கீதம் மலாய் மொழியில் இயற்றப்பட்டுள்ளது. ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் ஆகியவை சிங்கப்பூர் அரசின் ஏற்புடைய மொழிகளாகும். சிங்கப்பூர் விடுதலை அடைந்தது முதல் ஆட்சி மொழியாக ஆங்கிலம் வளர்க்கப்பட்டுள்ளது.

லீ குவான் யூ



லீ குவான் யூ
லீ குவான் யூ (பிறப்பு செப் 16 , 1923), சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமர் (1959 - 1990) ஆவார். இவர் சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சியின் (PAP) நிறுவனர்களுள் ஒருவரும் ஆவார். பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின்னரும் ஒரு முதுநிலை அமைச்சராகப் பணியாற்றினார். சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமரான லீ சியன் லூங், இவரின் மகன் ஆவார். பிரதமர் ஆட்சியில் இருந்து இறங்கிய பின்னரும் சிங்கப்பூரின் மிக முக்கியமான அரசியல்வாதியாக இருக்கிறார். சிங்கப்பூரின் இரண்டாவது மந்திரியின் (கோ சோக் தோங்கு) கீழ் (senior minister) ஆக பணியாற்றினார். இப்பொழுது இவருக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு முக்கிய பதவி (Minister Mentor) வகித்து வருகிறார்.

குடும்பம்

லீ குவான் யூ, அவரின் வாழ்க்கை வரலாற்றில் தான் நான்காவது generation சீனத்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் மூதோதயார் லீ போக் பூன், 1846ஆம் ஆண்டு சீனாவில் உள்ள குவாங்தொங் province இல் இருந்து வெளியேறி சிங்கப்பூரின் Strait settlements க்கு வந்ததாக கூறி உள்ளார்.