1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Monday, September 13, 2010

கூகிள் வரலாறு

 கூகிள் இன்க்.
 Google Inc.
Google.png
வகை பொது (NASDAQGOOG), (வார்ப்புரு:Lse)
தொடக்கம் மென்லோ பார்க், கலிபோர்னியா (செப்டம்பர் 7 1998)[1]
தலைமையகம் மவுன்டன் வியூ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
முக்கியமான நபர்கள் எரிக் ஷ்மித், டைரக்டர்
சேர்ஜி பிரின், தொழில்நுட்ப தலைவர்
லாரி பேஜ், Products President
ஜோர்ஜ் ரேய்ஸ், CFO
தொழில்துறை இணையம், மென்பொருள்
விற்பனை பொருள் see: list of Google products
வருவாய் US$10.604 billion 73% (2006)[2]
நிகர வருமானம் US$3.077 billion 29% (2006)[2]
ஊழியர்கள் 15,916 (செப்டம்பர் 30 2007)[3]
அடைமொழி பிசாசு மாதிரி இருக்காதீர்
வலைத்தளம் www.google.com
கூகுள் ஒரு பிரபல்யமான தேடுபொறியாகும். இதன் வரலாறு இங்கு கட்டுரை மூலமாக உள்ளடக்கப்படுகின்றது.

ஆரம்ப வரலாறு

 

செர்ஜே பிரின்
லாரி பேஜ்
கூகிள் 1996ம் வருடம் சனவரி மாதம், லாரி பேஜ்(Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின்(Sergey Brin) என்பவரும் தங்கள் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக(Ph.D.) லிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் ல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆராய்ச்சிக்கான தலைப்பின் (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு) முடிவில் தோன்றியதாகும். ஆரம்பத்தில் லாரி பேஜின் ஆராய்ச்சிக்கான விடயமாக மட்டுமே இது இருந்த போதிலும் வெகு விரைவிலேயே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான செர்ஜே பிரின் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும் தமது ஆய்வை இணைய தேடுபொறிக்கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர்.
இவர்கள் தாம் சேகரித்த தகவல்களின்படி தேடுபொறியில் தேடப்படும் விடயம் எந்த இணைய பக்கங்களில் உள்ளது என்பதையும் அதன் தொடர்புகளையும் அலசி ஆராய்ந்து தேடுபதிலாக பட்டியலிடுவதே சிறந்த முறை எனவும் முடிவு செய்தனர். இது அப்போது பாவனையில் இருந்த தேடுபொறி தனது தேடும் விடயத்தை எந்த இணையப் பக்கம் அதிகம் கொண்டிருந்ததோ அதன் எண்ணிக்கை வரிசையில் (இறங்கு முகமான வரிசை) பதிலாக (கணினியின் திரையில்) கொடுத்ததை விட, தமது தேடுகருகியானது தேடிய விடையத்தின் பக்கங்களை அலசி தேடுபதிலாக வழங்கும் முறை சிறப்பான தொழில் நுட்பம் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்கள் தமது ஆராய்ச்சிக்கு புனைபெயராக பாக்ரப்("BackRub") (பின்னால் தடவு அல்லது வருடு) என்ற பெயரை சூட்டியிருந்ததுடன் இந்த ஆய்வு ஒரு இணையத்தின் பின்புல (backlinks) இணைப்புகளுடன் முக்கிய பங்குவகிப்பதனால் அவ்வாறு அர்த்தத்தில் குறிப்பிடனர். இவர்கள் ஆய்வை மிகவும் ஒத்த விதத்தில் தேடு பதிலாலை கொடுப்பத்ற்கு அந்த காலகட்டத்தில் சிறிய தேடு பொறி ராங்டெக்ஸ்(RankDex) வேலைத் திட்டத்தில் இறங்கியும் இருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.
தேடப்படும் விடையம் அடங்கிய இணையப் பக்கங்களினால் அதிகம் எந்த ஒரு இணையப் பக்கம் இணைக்கப் படுகின்றதோ அதுவே தேடப்படும் விடயத்தின் தொடர்பான பதில் என தமது ஆராச்சியை நியாயப்படுத்தினர். இந்த ஆராச்சி ஸ்ரான்பேஃர்ட் பல்கலைக்களக பட்டப் படிப்புடன் சம்பந்தமான ஆராச்சி என்பதால் தமது விதிகளை அங்கு பரீட்சித்தும் பார்த்ததோடு கூகிள் தோன்றவும் அடிகோலினர். ஆரம்பத்தில் ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகத்தின் இணையப் பக்கங்களை தேடுவதற்காக google.stanford.edu என்ற பெயர் பாவிக்கப்பட்ட போதிலும் பின்னர் கூகிள்.கொம் (google.com) என 1997ம் ஆண்டு செப்ரம்பர் 15ம் நாள் பதிவு செய்யப்பட்டதுடன் 1998 செப்ரம்பர் 15ம் நாள் கூகிள் தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது. 1998 செப்ரம்பர் 7இல் நண்பர் ஒருவரின் கார்த் தரிப்பிட கொட்டகையில் கூகிள் வர்த்தக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. புதிய நிறுவனத்திற்கு முதலிடுவதில் பலரையும் அணுகி ஒரு வழியாக இறுதியில் 1.1 மில்லியன் டொலர்களை சேர்த்து கொண்டனர்.
மேலும், இவர்கள் ஆரம்பத்தில் மிக தீவிரமாக கூகோல்.கொம் (googol.com)என பெயர் சூட்டுவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். கூகோல் என்பதன் அர்த்தம் 1 ஐ தொடர்ந்து வரும் 100 பூச்சியங்கள் கொண்ட எண்ணைக் குறிக்கும் பெயராகும். ஆனால், அது சிலிக்கன் பள்ளத்தாக்கு (Silicon Valley) பொறியியலாளர் ஒருவரால் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன் அந்தபெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கவில்லை. எனவே, இவர்கள் தமது நிறுவனத்திற்கு தீவிரமாக பெயர் தேடும் போது தவறுதலாக தட்டச்சு செய்தபோது பிறந்ததே "கூகிள்" என்ற புதிய சொல். கார் கொட்டகையில் இருந்து இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் 1999ம் மார்ச் மாதம் சிலிக்கன் பள்ளத்தாக்கிற்கு மாற்றலாகின. அங்கு வெவ்வேறு இரு இடங்களில் "கூகிள்" இயங்கிய போதிலும் விரைவான வருவாய்,வளர்ச்சி காரணமாக பெரிய கட்டிட தொகுதிக்கு வாடகை அடிப்படையில் 2003இல் மாற்றலாயிற்று. அன்றிலிருந்து அதே இடத்திலேயே இருப்பதுடன் அக் கட்டிடத் தொகுதி கூகிள்பிளெக்ஸ் (googolplex) எனவும் பெயர் பெற்றது. பின்பு 2006 இல் 319 மில்லியன் டொலர்களை கொடுத்து அந்த கட்டிடத்தொகுதியை கூகிள் கொள்முதல் செய்தும் கொண்டது.
கூகிள் தனது எளிமையான தேடி மூலமாக அடிக்கடி உபயோகிக்கும் இணைய பாவனையாளர்களுடன் புதிது புதிதாகவும் பலரையும் கவரத் தொடங்கியது. தேடுபொறியில் தேடப்படும் சொற்களுடன் தொடர்பான விளம்பரங்களை 2000ம் ஆண்டில் இருந்து கூகிள் சேர்க்கத் தொடங்கியதோடு விளம்பரங்கள் இணைப் பக்கங்களின் அமைப்பை குலைக்காமலும், இணைப் பக்கங்கள் கணனி திரைகளில் விரைவாக தோன்று வதற்காகவும் ஆரம்பத்தில் எழுத்துருக்களில் மட்டும் வடிவமைக்கப் பட்டிருந்தன. தேடுபொறியில் தேடலை ஒத்த விளம்பரங்கள் கேள்வி மூலமாக அல்லது சொடுக்கப்படும் விகிதத்திலும் விற்கப்படுவதுடன் இவற்றின் ஆரம்ப விலை 0.05 டொலராகவும் உள்ளது. இந்த தேடு விடையத்தை ஒத்த விளம்பரத்தினை இணையத் தளங்களில் காண்பிக்கும் நுட்பமானது Goto.com என்ற நிறுவனமே முன்னோடிகளாக இருந்தார்கள். கோட்டு.கொம் என்ற இதன் பெயர் "ஒவேச்சர் சேர்விசஸ்" (Overture Services) ஆகவும் பின்நாளில் யாகூ! இனால் கொள்முதல் செய்யப்பட்டு "யாகூ சேர்ச் மாக்கெற்றிங்" (Yahoo! Search Marketing) ஆயிற்று. கூகிளுடன் போட்டி ஆகி இருந்த பல புதிய நிறுவனங்களும் இணையத்தள சந்தையில் தோற்று விட "கூகிள்" லாபமீட்டுவதுடன் உறுதியாக வெற்றியீட்டி வருகிறது.
ஆரம்பத்தில் "கூகோல்" (googol) என்பது அதன் அர்த்தம் கண்டு விரும்பப் பட்ட போதிலும் எழுத்துப் பிழைகளுடனான "கூகிள்" என்பது மிக பிரபலம் ஆயிற்று. இன்று பெரும்பாலும் ஒவ்வொரு மொழியிலும் அதிகம் பேசப்படும் வினைச் சொல்லாக மாறி விட்ட இதை ஒக்ஸ்ஃபோர்ட் அகராதி 2006இல் சேர்த்ததுடன் அதனை 'கூகிள் தேடுபொறி இணையத்தில் தகவல் பெற பாவிக்கப்படுகின்றது' என அர்த்தப் படுத்தியும் உள்ளது. கூகிள் தேடுபொறி தேடுதலுக்கான பட்டியலிடும் தொழில் நுட்பமானது 2001ம் செப்ரம்பர் 4ம் திகதி காப்புரிமம் செய்யப் பட்டதுடன் ஸ்ரான்ஃபோர்ட் பல்கலைக்கழக அதிகாரபூர்வ கண்டுபிடிப்பாளர் காப்புரிமத்திலும் பட்டியலிடப் பட்டுள்ளது.

கூகிளின் பங்குச் சந்தை வருகை

கூகிள் தேடுபொறி 1998 செப்ரம்பர் 7இல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நிறுவப்பட்டது. இணைய தேடுதலிலும் இணைய விளம்பரத்திலும் சிறப்பு பங்கு வகிக்கும் கூகிள் 2004ம் ஆகஸ்ட் 19ம் நாளில் இருந்து பொது மக்கள் நிறுவனமாக தன்னை பதிவு செய்துகொண்டது. இந்த நிறுவனத்தில் 15,916 முழுநேர வேலையாட்கள் (2007 செப்டம்பர் 30ம் கணக்கெடுப்பின் படி) பணியாற்றுவதுடன் இதுவே நாஸ்டாக் (NASDAQ) இல் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனங்களில் பெரியதுமாகும். லாரி பேஜ் , சேர்ஜி பிரின் ஆகியோரினால் சேர்ந்து உருவாக்கப்பட்ட கூகிள் நாஸ்டாக் (NASDAQ) பங்குச்சந்தையில் வந்த 2004ம் ஆகஸ்டு 19 அன்று $1.67 பில்லியன்களுக்கு பங்குகள் விற்பனை ஆகியதுடன் $23 பில்லியன் மேலாக கூகிள் நிறுவனம் மதிப்பாகியிருந்தது. படிப்படியாக தொடரான புதிய பொருட்களின் வடிவமைப்பு, மற்றய நிறுவனங்களை கொள்முதல் செய்வது, பங்குதாரர்கள், ஆரம்பத்தில் இருந்த விளம்பர யுக்தி விஸ்தரிப்பு, இணைய மின்-அஞ்சல் (webmail), இணையவழி வரைபடம்(Google Earth), அலுவலக உற்பத்தி ஆகியவற்றுடன் இணையவழி வீடியோ(video) வையும் இணைத்து கொண்டதன் மூலமாக பன்மடங்கு (4மடங்கிலும் மேலாக) மதிப்பில் கூகிள் தன்னை தற்போது உயர்த்திக் கொண்டுள்ளது. அத்துடன் 2005ம் யூன் மாதம் $52 பில்லியன் சந்தைப் பெறுமதியுடன் $7 பில்லியன் பணத்தினையும் கூகிள் தம் வசம் வைதிருந்தது. இத்தனைக்கும் "பிசாசு மாதிரி இருக்காதீர்" (don't be evil) (இதையே தனது வியாபார அடை மொழியாக கூகிள் பதிவு செய்திருந்தது.), என மற்றயவர்களை ஆரம்பத்தில் இருந்து கூறிவந்த கூகிள் தற்போது தனது நிலைப் பாட்டினை நியாயப்படுத்தி வருகிறது. மேலும், கூகிள் தனது தேடுபொறியின் இலச்சனை (logo) யில் பலவித கண்கவர் யுக்திகளை சிறப்பு நாட்களில் கூகிள் டூடிள்ஸ் (Google Doodles) என வெளியிட்டும் வருவதும் யாருமறிந்ததே.

மூலதனமும் பங்குச் சந்தையும்

முதலாவது முதலீடாக ஒரு இலட்சம் டொலர்களை சன் மைக்கிரோசிஸ்டம்ஸ் (Sun Microsystems) இன் ஸ்தாபகர்களில் ஒருவர் மூலம் மட்டுமே பெற்றனர் என்பதுடன், அப்போது கூகிள் நிறுவனம் தோன்றி இருக்கவுமில்லை. இந்த முதலீட்டின் பின் 6 மாதங்கள் சென்ற நேரத்தில் பல முதலீட்டாளர்கள் முதலிட முன் வந்தும் இருந்தனர். அத்துடன், 2003ம் ஒக்டோபர் மாதத்தில் பங்குச் சந்தையில் கூகிளை எடுத்துச்செல்ல ஆலோசிக்கும் வேளை மைக்கிரோசொஃப்ட் (Microsoft) புகுந்து பங்காளியாக அல்லது தத்து எடுப்பதற்கு எடுத்த முயற்சி கைகூடாமற் போயிற்று. ஜனவரி 2004இல் உலகின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளான மோர்கன் ஸ்ரான்லி (Morgan stanley), கோல்மான் சாச்ஸ் (Goldman Sachs) இனால் பங்குச் சந்தையில் சேர்வதற்கான ஏற்பாடு தொடங்கபட்டது. பங்குச் சந்தையில் முதல்நாள் சேரும் வேளை $4 பில்லியங்களாவது திரட்டப்படும் எனவும் கணக்கிட்டனர்.
இதனிடையே கூகிளானது 2004ம் மேமாதம் இரு பெரிய முதலீட்டளர் வங்கியில் ஒன்றான கோல்மானை வெட்டி விட்டு வேறொரு பிரபல்யமான வங்கியை இணைத்துக் கொண்டு 2004ம் ஆகஸ்டு 19ம் நாள் முதல் முதலாக பங்குச் சந்தைக்கு 19,605,052 பங்குகளுடன் வந்தபோது ஒவ்வொரு பங்கும் $85க்கு விற்கப்பட்டது. முதல் நாள் மொத்தமாக கைமறிய பங்குகள் 22,351,900 என்பதுடன் அன்றைய இறுதி நேர விலை $100.34 ஆக மூடப்பட்டது, இது உத்தேசிக்கப்பட்ட அளவு தொகையை விடவும் மிக குறைவாகவும் இருந்தது. எனினும் அன்று கூகிளின் இரட்டையர்கள் தம்வசம் 271 மிலியன் பங்குகளை வைத்திருந்ததன் மூலமாக $23 பிலியன்கள் மேல் நிறுவனத்தை மதிப்பு ஏற்றியதோடு $1.67 பில்லியன்களை பணமாக திரட்டியும் கொண்டனர். அத்தோடு கூகிளில் பணியாற்றும் பலரையும் அன்று திடீர் கடதாசி டொலர் மில்லியனர்கள் ஆக்கியதும் அல்லாமல் வியாபார எதிரியாக இருக்கக் கூடிய யாகூ! (8.4 மில்லியன் பங்குகளை நட்டஈடாக பெற்றுக் கொள்ள ஒரு பேரத்தில் பங்குச் சந்தையின் 10 நாள் முன் உடன் பட்டன). ஐயும் ஆக்கியிருந்தது. இதன் அபார தொடர் வளர்ச்சியில் 2005ம் யூன் மாதம் கூகிள் நிறுவனம் $52பில்லியன்கள்(பங்குகள் தவிர $7பில்லியன்கள் பணமாக) மேல் மதிப்பானதுடன் இதுவே உலகின் மிகப்பெரிய பெறுமதியுள ஊடகவியல் நிறுவனம் ஆயிற்று. தொடற்சியாக பங்குகள் ஏற்ற இறக்கம் கண்டு 2007ம் ஒக்டோபரில் ஒரு பங்கு $700 ஆக இருந்த கூகிளின் பங்குகள் அமெரிக்கா, லண்டன் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப் பட்டுள்ளது.

சுவீகரிப்பு, கூட்டுக்கள்

கூகிள் பெப்ரவரி 2003இல் வெப்லொக் (weblog) இன் முன்னோடியும் புளொக்கர்(Blogger) இன் சொந்தக்காரரான பைரா லாப்ஸ் (Pyra Labs)ஐ சொந்தமாக்கிற்று. உலக இணையத் தளத்தின் 84.7 விகிதமான தேடுதல்களை 2004ம் முற் பகுதியில் கூகிள் நிறுவனமானது யாகூ, ஏ.ஓ.எல் (AOL), சி.என்.என் (CNN) ஆகியவற்றுடன் கூட்டுச் சேர்ந்து செய்திருந்தது, பின்பு 2004ம் பெப்ரவரி இல் யாகூ விலகிக் கொண்டு தனது சொந்த தேடுபொறியை தொடங்கிற்று. யாகூ விலகிக் கொண்ட விடயம் கூகிள் நிறுவனம் சந்தித்த ஒரு பெரிய சவாலாக இருந்த போதிலும் ஜீமெயில்( Gmail), ஓர்க்குற்(orkut), மற்றும் புதிய பல யுக்திகள் மூலமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.
அத்துடன் கூகிள் நிறுவனம் தனது நீண்டகால ஆராய்ச்சிக்கான நாசா (NASA) இன் கூட்டு 2005ம் செப்டம்பரிலும், இணையத்திற்கான கூட்டு "ஏ.ஓ.எல்" (AOL)லுடன் டிசம்பர்இலும் உருவாக்கிக் கொண்டது. மேலும், சன்மைக்கிரோ (Sun Microsystems) உடன் தொழில் நுட்ப்பத்தை பகிர்ந்து கொள்வதோடு, கூகிள் நிறுவனம் தனது ஊளியர்களை ஓப்பிண் ஆபிஸ்(OpenOffice.org) நிறுவன வேலைகளிலும் வாடகைக்கு அமர்த்தி உள்ளது. இதனிடையே 2004கும் 2006ம் வருட இறுதிக்கும் உள்ள காலகட்டத்தில் பல மென்பொருள் முன்மாதிரி நிறுவனங்களையும் வானோலி விளம்பர நிறுவனம் டிமார்க்(dMarc)ஐ தம் வசமாக்கிக் கொண்டதுடன் $900 விளம்பர உடன்பாட்டை மைஸ்பேஸ் (MySpace) உடன் செய்தனர். கூடவே, 2006இன் இறுதி காலத்தில் யூ டியூப் (YouTube) என்ற மிகவும் பெயர் பெற்ற இணையத்தள வீடியோ $1.65 பில்லியனிற்கு கூகிளினால் கொள்முதலானது, இத்துடன் விக்கி தொழில் நுட்பத்தை வடிவமைத்த ஜொட்ஸ்பொட் (JotSpot)ம் சொந்தமாக்கப்பட்டது.
இத்துடன் நிற்காமல் 2007ம் ஏப்ரலில் $3.1பில்லியன் கொடுத்து டபள் கிளிக் (DoubleClick)ஐ கொள்முதல் செய்ததோடு 2007ம் யூலை 9இல் பொஸ்டினி (Postini)யும் கொள்முதல் செய்து கொண்டது. இத்தனைக்கும் மத்தியில் தனது பரம எதிரியான மைக்கிரோசொப்ற் (Microsoft) இன் பல திறமை உள்ளவர்களையும் தம்வசம் ஈர்த்ததுடன் அந் நிறுவனம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கினை நீதிமன்றம் வெளியே இரகசியமாக 2005 டிசம்பர் 22இல் தீர்த்தும் கொண்டது. கூகிள் நிறுவனம் 2006ல் ".மோபி" (.mobi) எனப்படும் கைத்தொலைபேசி இணைய முகவரி தோற்றத்திற்கு காரண கர்த்தாவாகவும், முதலீடு இட்ட நிறுவனமாகவும் முன்நிலை படுத்தியதோடு ஸீங்கு.மோபி (Zingku.mobi), கூகிள்.மோபி (Google.mobi)இன் சொந்தக் காரருமாகவும் கூகிள் உள்ளது.

நன்கொடை

2004ல் இலாபம் ஈட்டாத "கூகிள்.ஓர்க்" (Google.org) ஐ நிறுவியதோடு ஆரம்ப நிதியாக $1பிலியன் வைப்பு செய்யப்பட்டது. இந் நிறுவனத்தின் முன்நிலை கவனிப்புக்களாக சூழல் வெப்பமாகுதல் தடுத்தல்,உலக சுகாதாரம்,உலக வறுமை ஒழிப்பு என்பன உள்ளடக்கப் பட்டுள்ளது. அத்துடன் இந்த அமைப்பின் முதல் திட்டமாக மின்சாரத்தில் இயங்கும் வகனங்களை வடிவமைக்கும் திட்டம் டாக்டர்.லாரி (Dr.Larry) தலைமையில் தொடங்கப் பட்டுள்ளது.

Friday, September 3, 2010

வருங்காலத் தொழில்நுட்பம் (2)

அலைபேசித் தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ந்தபடி இருந்தாலும், குறிப்பிட்ட
இடங்களில் சுவரில் இணைக்கப்பட்ட தொலைபேசியின் வசதியை மறுக்க முடியாது. இதைக் கருத்தில்கொண்டு கூகுள் தனது 'கூகுள் வாய்ஸ்' (http://voice.google.com) தொழில்நுட்பத்தின் பலத்தில், பொது தொலைபேசி பூத்களை நிறுவத் தொடங்கி இருப்பது இந்த வாரத்தில் குறிப்பிடப்பட வேண்டிய இணைய இண்டஸ்ட்ரி நிகழ்வு. இந்தத் தொலைபேசி சேவை இலவசம் என்பது அடிக்கோடிட்டுச் சொல்ல வேண்டி யது. ஜி-மெயில் போன்ற பல சேவைகளுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும் இந்த வாய்ஸ் சேவையை அதிகமானோர் பயன்படுத்தும்போது, அவர்கள் கூகுளையும் தொடர்ந்து பயன்படுத்தக்கூடும் என்பதால், அவர்களுக்கு விளம்பரங்களைக் காட்டுவதன் மூலம் தனது வருமானத்தை அதிகரிக்கலாம் என்பது கூகுளின் திட்டம்.
சற்று ஆழமாக இதைப் பார்த்தால், வேடிக்கையாக இருக்கிறது. சில வருடங்கள் முன்பு வரை இணையத்தில் இணைக்க தரை வழித் தொலைபேசி (landline) இணைப்பு தேவைப்பட்டது. இப்போது தொலைபேசுவதற்கு இணையம் தேவைப்படுகிறது.
இந்த வார ஃபேஸ்புக் உலகின் முக்கிய நிகழ்வு... Places http://www.facebook.com/places/. ஃபேஸ்புக் பயனீட்டாளராக இருந்தால், இதுவரை நீங்கள் யார், எப்போது, என்ன செய்கிறீர்கள் என்பதை மட்டுமே உங்கள் நட்பு வட்டத் தில் தெரிவித்தபடி வந்திருக்கிறீர்கள். இப்போது 'எங்கே' என்பதையும் இதில் சேர்த்துக்கொள்ள முடியும். இதன் சாதக, பாதகங்களைப் பார்க்கும் முன்னால், சமூக வலைதளங்களில் இருக்கும் Tagging என்ற பழக்கத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வது அவசியம்.
மனிதன் ஒரு சமூக மிருகமே (Man is a social animal) என்பது பிரபல சொலவடை. தனித் தீவுகளாக மனிதர்களால் வாழ முடியாது. அதே நேரம், மற்றவர்களுடன் குழுவாக வாழும்போதும், தனக்கான எல்லைகளை வகுத்துக்கொண்டாலும், குழுக்களுடன் தகவலைப் பரிமாறிக்கொள்வது அவசியமான பழக்கம். தெரு நாய்கள் தங்களது எல்லைகளைத் தங்களது 'நம்பர் ஒன்'னைப் பயன் படுத்திக் குறியிட்டு வைத்துக்கொண்டாலும், இரவில் ஒரு நாய் ஊளையிட்டால், அருகில் இருக்கும் பக்கத்துத் தெரு நாய் உறவினர்களும் சேர்ந்து ஊளையிடுவ தைப் பார்த்திருப்பீர்கள். ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் கிட்டத்தட்ட இதுதான் நடக் கிறது.
500 மில்லியன்களுக்கும் அதிகமான பயனீட்டாளர் களைக்கொண்ட ஃபேஸ்புக் தளத்தில் உங்களது எண்ணச் சிதறல்களின் விவரிப்புகளைச் சுருக்க மாகவோ, மிக விரிவாகவோ பகிர்ந்துகொள்ள முடியும். அதுபோலவே, புகைப்படங்கள், வீடியோக் கள் போன்றவற்றையும் பகிரலாம். ஆனால், நீங்கள் உங்களுக்கான பக்கத்தில் இவற்றைக் கொடுத்துக்கொண்டே வருவது, உங்களது டைரியை வீட்டுக்கு வெளியே தினமும் வைத்துவிட்டுச் செல்வதுபோல. யாராவது வந்து அதைத் திறந்து படிக்கலாம்; படித்து தனது கருத்துக்களை எழுதிவைக்கலாம்; படிக்காமலேயும் போகலாம்.
உங்களது தகவல்கள் நிச்சயம் மற்றவர்களுக்குத் தெரிந்தாக வேண்டும். அவர்களது பின்னூட்டங்கள் உங்களுக்குத் தேவை என்றால் என்ன செய்வீர்கள்? குறிப்பிட்ட நபர்களுக்கு உங்களது தகவல்களை அனுப்பிவைப்பீர்கள். அது அவர்களுக்குப் பிடித்த தாக இருந்தால், அதற்குப் பின்னூட்டம் கொடுப்ப துடன், அவர்களுக்குத் தெரிந்த நபர்களுக்கு உங்களது தகவல்களை அனுப்பவும் செய்யலாம். சமூக வலை தளங்களில் இதைச் செய்வதற்குப் பெயர் Tagging.
சரி, இதுவரை தகவல்களைப் பரிமாற்றம் மட்டுமே செய்ய முடிந்த சமூக வலைதளங்கள் இப்போது நீங்கள் புவிப் பந்தில் எங்கே இருக்கிறீர்கள் என்பதையும் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டு கின்றன. இதற்கு ஒரு முக்கியக் காரணம், உள்ளூர்/ லோக்கல் வியாபாரங்களின் விளம்பர வருமானம். இப்போதைய இணைய தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, நீங்கள் இணையத்தில் இணைக் கப்பட்டு இருக்கும்போது, நீங்கள் எங்கே இருக்கி றீர்கள் என்பதைத் தோராயமாக மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். உதாரணத்துக்கு, விகடன்.காம் வாசகர் முகிலன் தனது சென்னை அலுவலகத்தில் இருந்து ஃபேஸ்புக் தளம் சென்றால், ஃபேஸ்புக்குக்கு அவர் சென்னையில் இருந்து ப்ரவுசுகிறார் என்பது தெளிவாகத் தெரியும். ஆனால், தி.நகர் பத்மநாபன் சாலையில், மாயாண்டி மிலிட்டரி விலாஸில் நான்கு நண்பர்களுடன் மதிய உணவில் இருக்கிறார் என்பது முகிலன் சொன்னால் மட்டுமே சாத்தியம். அவரை எப்படியாவது இந்த விவரத்தைக் கொடுக்க வைத்துவிட்டால், அதே தெருவில் இருக்கும் மற்ற பிசினஸ்களின் விளம்பரங்களை அவருக்குக் காட்டி னால், அது மிகவும் வீரியமிக்கதாக இருக்கும் என்பது சமூக வலைதளங்களின், அதுவும் குறிப்பாக, ஃபேஸ்புக்கின் எண்ணம் + திட்டம்!
ஆனால், இதில்தான் சிக்கல் தொடங்குகிறது. தான் எங்கே இருக்கிறேன் என்பதைத் தெரிவிப்பதில் முகிலனுக்குப் பிரச்னை இல்லாது இருக்கலாம். ஆனால், அவர் தன்னுடன் இருப்பதாக Tagging செய்யும் அவரது நண்பருக்கு அதில் விருப்பம் இல்லையென்றால்?
உதாரணமாக, அவருடன் உணவருந்திய கபிலன் பணி முடிந்து மாலையில் வீட்டுக்குச் சென்று, மனைவி காலையில் கட்டிக் கொடுத்த தயிர்சாதத்தை தான் ரொம்பவும் விரும்பிச் சாப்பிட்டதாகப் புகழ்ந்துவைக்க, ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்து விவரம் தெரிந்துவைத்திருக்கும் கபிலனின் மனைவி... இது எங்கே சென்று முடியும் என்று விளக்கத் தேவை இல்லை.
சுருக்கமாகச் சொன்னால், ஃபேஸ்புக் போன்ற தளங்களின் உள்ளூர் (Local)Privacy Settings- தொழில்நுட்பங்களின் பல கோணங்களைப் பார்த்துவிட்ட பின்னர் பயன்படுத்துவது சிறந்தது. நான் இப்போதைக்கு ல், இந்த வசதியைப் பயன்படுத்துவதில் விருப்பம் இல்லை எனக் குறித்து வைத்திருக்கிறேன். இந்தத் தொடரின் வாசர்களுக்கு எனது ஆலோசனையும் அதுதான்!

நன்றி : விகடன் . காம்

Thursday, September 2, 2010

விண்டோஸ்: தடயங்களை அழிக்க..



ஒரு சில சமயங்களில் நாம் பிறரது கணினியிலோ அல்லது பொதுக் கணினிகளிலோ பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அது போன்ற சமயங்களில், அந்த குறிப்பிட்ட கணினிகளில் இணையத்தில் மெயில் அனுப்புவது, அல்லது முக்கியமான ஆன்லைன் பண வரிவர்த்தனை செய்து முடித்தப் பின்னர், நமக்கு பின்னர் அந்த கணினியை பயன்படுத்துபவர்கள், நமது இரகசியங்களை அல்லது நமது தனிப்பட்ட விபரங்களை அறியாமல் தடுக்க இந்த தடயங்களை அழிப்பது எப்படி? 
வழக்கமாக நாம் ஹிஸ்டரி க்ளின் செய்வது போன்றவற்றை செய்தாலும் கிளிப் போர்டு க்ளின் செய்வது போன்ற பல வகைகளில் நமது தடயங்களை அழிக்க CleanAfterMe என்ற இலவச மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 

இது ஒரு போர்ட்டபிள் மென்பொருள் என்பதால், கணினியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. இதனை நமது பென் ட்ரைவில் எடுத்துச் செல்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 





இதனை தரவிறக்கி CleanAfterMe.exe என்ற கோப்பை ரன் செய்தால் போதுமானது, நீக்க வேண்டிய விபரங்களை திரையில் தேர்வு செய்து Clean Selected Items பட்டனை க்ளிக் செய்து உங்கள் தடயங்களை அந்த கணினியிலிருந்து நீக்கி விடலாம். 

இந்த மென்பொருள் கோப்புகளை அழிப்பதற்கு முன்பாக அவற்றில் Zero க்களை நிரப்பி விடுவதால் வேறு எந்த Undelete மென்பொருள் கருவியைக் கொண்டும் மறுபடி மீட்டெடுக்க இயலாது என்பது இதனுடைய சிறப்பம்சம்.

Wednesday, September 1, 2010

பூமராங் - ஜிமெயிலுக்கான சூப்பர் நீட்சி!

நீங்கள் முக்கிய வேலை நிமித்தமாக நாளையோ அல்லது மறுநாளோ அல்லது வருகின்ற எதோ ஒரு குறிப்பிட்ட நாளோ பிசியாகி விடுவீர்கள்,  உங்களால்  அந்த நாளில் இணையத்தில் பணிபுரிய இயலாது என வைத்துக் கொள்வோம். அந்த குறிப்பிட்ட நாளில் ஒரு நண்பருக்கு இமெயிலில் வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்ப வேண்டும், அல்லது அலுவலக  நிமித்தமாக ஒரு  முக்கிய மின்னஞ்சலை அந்த குறிப்பிட்ட நாளில் அனுப்ப வேண்டும்.     
இதோ நீங்கள் அனுப்பும் அல்லது பெறும் மின்னஞ்சல்களை schedule செய்ய  வந்து விட்டது பூமராங் பீட்டா! நெருப்புநரி மற்றும் கூகிள் க்ரோம் உலாவிக்கான நீட்சி! இது பீட்டா நிலையில் இருப்பதால் Invite Code மூலமாகவே இதனை தரவிறக்க முடியும். தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. இந்த தளத்தில் Invite Code கேட்கும் பொழுது htg (சும்மா வச்சுக்கங்க..) என்ற Code ஐ கொடுத்து தரவிறக்கி கொள்ளுங்கள்.     


இது க்ரோம் மற்றும் நெருப்புநரி உலாவிகளுக்காக தனித்தனியாக தரப்பட்டுள்ளதால், உங்களிடமுள்ள உலாவிக்கு ஏற்றவாறு தேர்வு செய்து கொள்ளுங்கள். 


இந்த நீட்சியை பதிந்து கொண்ட பிறகு ஒரு முறை உலாவியை மூடி பின் திறக்கவேண்டும். 


இனி உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து புதிய மின்னஞ்சலை உருவாக்கும் பொழுது, மேலே புதிதாக ஒரு பட்டன் வசதி Send Later (Boomerang) வந்திருப்பதை கவனிக்கலாம். 


இதிலுள்ள வசதிகளை பயன்படுத்தி, உருவாக்கும் மின்னஞ்சலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப முடியும்.  அதுவரை அந்த மின்னஞ்சல் உங்கள் ஜிமெயில் சர்வரில் இருக்கும். 




அதே போல receive செய்வதற்கும் (மீண்டும் இன்பாக்ஸில் வரும்) ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சலை திறக்கும் பொழுது வலது மேல் புறம் வரும் Boomerang பட்டனை க்ளிக் செய்து schedule செய்து கொள்ளலாம். 




நன்றி : சூர்யா கண்ணன்

Saturday, August 28, 2010

இன்டர்நெட் நட்பு... எதேல்லாம் தப்பு?

ரு காலத்தில் புறா வழியாகச் செய்தி அனுப்பிக்கொண்டு இருந்தார்கள். ஒரு புறாவை
ஒரு நேரத்தில் பாயின்ட் டு பாயின்ட் பஸ்போல மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது முக்கியக் குறைபாடு. இதுபோக, கட்டப்படும் நூலின் தரம், பசியோடு வட்டமிடும் பருந்துகள், புறாக் கறியை விரும்பும் அரசர்கள்(!) என்று பலவிதமான ரிஸ்க் இருந்தது.
தபால் வசதி உலகம் முழுதும் வந்த பின்னர், பேனா நட்பு என்ற புதிய அத்தியாயம் பிறந்தது. ஈரோடு கலா அக்கா, ஸ்டுடியோவில் ஒரு கையை இன்னொரு கையால் பிடித்தபடி புன்னகைக்கும் புகைப்படத்தைத் தனது பேனா தோழியான பாரிஸில் இருக்கும் பெக்கிக்கு அனுப்ப, ஈஃபில் டவருக்குக் கீழ் பெக்கி குட்டியூண்டு தெரியும்படி நிற்கும் புகைப்படம் திரும்பி வரும்.

உலகில் எத்தனை பேனா நண்பர்கள் இருந் தனர் என்ற புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை. ஆனால், இ-மெயில் தொழில்நுட்பம் இதைப் பெருமளவு குறைத்திருக்கும். இ-மெயில் என்பது மனிதர்களுக்கு இரண்டு கைகள்போல மாறி விட்டது. 'இது என்னோட போன் நம்பர். ஆனா, இ-மெயில்தான் பெஸ்ட் பிரதர்' என்று சொல்லும் பலரை நீங்கள் பார்த்திருக்கலாம்.

எஸ்.எம்.எஸ் என்ற குறுஞ்செய்தித் தொழில்நுட்பம் இ-மெயில் போலத்தான் என்றாலும், சுருக்கமான தகவல்களைத் தொடர்ந்து முன்னும் பின்னும் பகிர்ந்துகொள்ள வசதியானது. இ-மெயிலுக்கு அடுத்து கலக்கலாக வந்த சாட் தொழில்நுட்பம் இன்னும் அற்புதம். ஆன்லைனில் இருக்கும் நண்பனிடம், 'டேய், என்னடா பண்ற?' என்று கேட்க முடிகிறது.
சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவை மேற்கண்ட பல தொழில்நுட்பக்கூறுகளை ஒன்றாகத் தொகுத்துக் கொடுக்கிறது. இதனால் நட்பு வட்டத்துடன் தொடர்பில் இருக்கவும், புதிய தோழமைகளைக் கண்டறியவும் பெருமளவில் இந்தச் சமூக வலைதளங்கள் பயன்படுகின்றன. 

பலதரப்பட்ட நட்புகளை நிர்வகிப்பது எப்படி என்பதற்கான டிப்ஸ்:
முதலில் இ-மெயில்...
50 சதவிகித இ-மெயில்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது என்கிறது ஓர் ஆய்வு. முக்கியமாக, ஆங்கிலத்தில் எழுதும்போது முழு வாக்கியங்களையும் UPPER CASE எழுத்துக்களில் எழுதுவதைத் தவிருங்கள். அது நீங்கள் எழுத்தில் கத்துவது போன்ற உணர்வைக் கொடுக்கலாம். வார்த்தைகளின் தொனியில் கவனமாக இருங்கள். எழுதிய வார்த்தைகளில் கோபமும் எரிச்சலும் உங்களை அறியாமலேயே இருப்பதைக் கண்டறிய டோன்செக் (http://www.tonecheck.com/) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். நினைவிருக்கட்டும்... ஆறாதே இ-மெயிலால் சுட்ட வடு.

வதவதவெனக் கண்ணில் கிடைக்கும் பொன்மொழிகளையும், புகைப்படங்களையும், ஜோக்குகளையும் அனுப்பாதீர்கள். அது உங்களது நேரத்தையும், அவரது நேரத்தையும் சேர்த்துக் காலி செய்யும். அவசியம் தவிர, நண்பர் ஒருவருக்கு ஒரு நாளில் அதிகபட்சம் இரண்டு இ-மெயில் மட்டுமே அனுப்புங்கள். இதன்மூலம், அவரது இ-மெயில் பெட்டி நிறைந்து வழியாமல், கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். நீங்கள் மானாவாரியாக அனுப்பும் இ-மெயில்களால் கடுப்பாகி, உங்கள் இ-மெயில் விலாசத்தையே 'குப்பை' ( Spam ) என நட்பு வட்டம் குறித்து வைக்கக்கூடும். காரணம், அதிகமானவர்கள் அப்படிக் குறித்துவைத்தால், gmail, hotmail போன்ற இ-மெயில் சேவை தொழில்நுட்பங்கள் உங்கள் இ-மெயிலைத் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ மூடிவிடும் முகாந்தரம் உண்டு.
பல நண்பர்களுக்குப் பொதுவான இ-மெயில் அனுப்பும்போது, எல்லோருடைய விலாசங்களையும் To அல்லது CC (Carbon Copy) பகுதியில் கொடுப்பது விவேகமான செயல் அல்ல. யார் யாருக்கு அவர்கள் உங்களது மெயிலை ஃபார்வர்ட் செய்வார்கள் என்பது தெரியாது. இ-மெயில் விலாசங்களைச் சேகரித்து சகட்டு மேனிக்கு மார்க்கெட்டிங் செய்பவர்கள் கையில் அனைவரின் இ-மெயில் முகவரிகளும் கிடைத்து, நண்பர்களின் சாபத்துக்கு ஆளாக நேரிடலாம். அதற்குப் பதிலாக, உங்களுடைய இ-மெயில் விலாசத்தையே To பகுதியிலும் போட்டு, BCC (Blind Carbon Copy) பகுதியில் மற்ற அனைவரின் இ-மெயில் விலாசங்களும் கொடுங்கள். இப்படிச் செய்தால், எந்தக் கொம்பனாலும் இ-மெயில் விலாசங்களைத் திருட முடியாது.

இ-மெயில் அனுப்பிய உடனே, போனிலும் அழைத்து 'மச்சான், இ-மெயில் பார்த்தியா? என்ன அனுப்பியிருக்கேன்னா...' என்று ஆரம்பித்து, இ-மெயில் முழுவதையும் வாசித்துக் காட்டுவது அநாவசியம் + அநியாயம்.
இ-மெயிலின் கீழ்ப் பகுதியில் உங்களது மற்ற தொலைபேசி, வீட்டு முகவரி போன்ற தொடர்பு தகவல்களைக் கொடுப்பது சிறந்தது. 

சமூக ஊடக வலைதளங்களில் தொடர்புகளை நிர்வகிப்பது எப்படி? 
உங்களுக்குத் தெரியாதவர்களை உங்கள் நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொள்ளும் முன்னால், அவர் வில்லங்கமான ஆசாமியா, அல்லது போலியான profile போன்றவற்றை தீரப் பரிசோதித்து இணையுங்கள். நீங்கள் பகிர்ந்துகொள்ளும் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைவரும் பார்ப்பது மட்டுமன்றி, அவை நகல் எடுக்கப்பட்டு பல இடங்களில் சென்று சேரும் வாய்ப்பு இருக்கிறது. இதில் மிக மிக மிகக் கவனம் தேவை. அதிபர் ஒமாபா இதைப்பற்றி இளைஞர்களிடம் பேசுவதை இந்த உரலியில் பாருங்கள் http://www.youtube.com/watch?v=Awwp9BFfAY8
உருப்படி இல்லாத தகவல்களை, புள்ளிவிவரங்களை ஃபேஸ்புக் சுவரில் எழுதிவைப்பதைத் தவிர்க்க முயலுங்கள். நீங்கள் எழுதுவது எல்லாம், உங்கள் நண்பர்களின் பக்கங்களிலும் வரும் என்பதால், இதிலும் கவனம் அவசியம்.
பார்க்கும் தகவல்கள் ஏதாவது சுவாரஸ்யமானதாக இருந்தால், 'Like' செய்வது தவறு அல்ல. ஆனால், பார்க்கும் எல்லாவற்றையும் 'Like' செய்வது நல்லதல்ல.
பின்னூட்டங்கள் இடும்போதும் கவனத்துடன் இடுங்கள். கிண்டலாகவும் கோபமாகவும் பின்னூட்டங்கள் இடுவது தவறு என்று சொல்ல மாட்டேன். நீங்கள் பின்னூட்டம் இடும் குறிப்பிட்ட நண்பருடன் உங்களுக்கு நல்ல புரிதல் இருக்கலாம். ஆனால், நீங்களும் உங்கள் நண்பரும் தனி அறை யில் இல்லை என்பதை மனதில்கொள்ளுங்கள். அவரது நட்பு வட்டத்தில் உங்களைத் தெரியாத நபர்கள் இருக்கலாம். உங்களது நட்பு வட்டத்தில் அவரைத் தெரியாத நண்பர்கள் இருக்கலாம். உங்களது பின்னூட்டங்கள் உங்களைப்பற்றியோ, அல்லது நண்பரைப்பற்றியோ தவறான பிம்பத்தை ஏற்படுத்திவிடாமல் இருக்க வேண்டும். உங்களுக்கு இதில் லேசாகச் சந்தேகம் இருந்தால் அவருக்கு நேரடியாக பிரத்யேக மெயில் அனுப்புங்கள்.

இணைய நட்பை நிர்வகிப்பது எப்படி?
'முகநக நட்பது நட்பன்று' வள்ளுவம் சொல்கிறது வாழ்க்கை முழுதும் தொடரும் நட்பின் இலக்கணத்தை. பள்ளி, கல்லூரி, அலுவலகம், சமூகம் என அனைத்து நிலைகளிலும் நட்பு என்பது சமூக அமைப்பில் ஓர் உறவு என்ற அடையாளத்தைத் தாண்டி, சமூக குணநலனாகக் கருதப்படுகிறது. இந்த உலகத்தில் நட்பு இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அப்படி மக்களுடன் நெருங்கிப் பழகாமல் ஒட்டுதல் இல்லாமல் இடைவெளிவிட்டு ஒதுங்கி வாழ்பவர்களை 'ஆஸ்பர்ஜெர்' என்று வரையறுக்கிறது உளவியல். 

கை குலுக்கி, கன்னம் கிள்ளி, முதுகு தட்டி, கண்ணாமூச்சி ஆடி, சிறு வயதில் தோன்றுகிற நட்பு காலப்போக்கில் காலாவதியாகிவிடுகிறது. இப்போதெல்லாம் பக்கத்தில் இருக்கும் நண்பர்களைப் பார்க்க முடியாத பணிச் சூழலில் குறுஞ்செய்திகள், இ-மெயில்கள்தான் நட்பைக் காக்க உதவுகின்றன. முகத்துக்கு முகம் பார்த்து, தோள் தாங்கி, மடி சாய்ந்து, சிரித்து வளர்த்த இந்த நட்பையே நம்மால் சரியாக நிர்வகிக்க முடியாதபோது, உலகின் எங்கோ ஒரு மூலையில் இணை யம் என்ற கலங்கிய குட்டையில் தன் முகம் மறைத்து நண்பன் என்று நம்மிடம் அறிமுகப்படுத்திக்கொள்ளும் மனிதர்களையும், உண்மையிலேயே அன்புக்காக ஏங்கும் இணைய இதயங்களையும் எப்படி இனம் கண்டுகொள்வது?
பொதுவாக, இணைய நட்பு என்பதை உண்மையான நண்பர்கள், பிசினஸ் அசோஸியேட்ஸ், க்ளையன்ட்கள் - நேற்று, இன்று, நாளை, முன்னாள் நண்பர்கள், சமூக வலைதள நண்பர்கள், சர்க்கிள் ஆஃப் ஸ்பியர், தெரியாதவர்கள், பொது விருப்பங்கள் என்று எட்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
ஒவ்வொரு இணைய நட்பு வட்டத்தையும் எப்படி நிர்வகிக்கலாம்


உண்மையான நண்பர்கள் 

உங்களைப்பற்றி அறிந்தவர்கள் என்ற பெர்சனலான எல்லைக்குள் வருபவர்கள். அவர்களைப்பற்றி நீங்களும் முழுவதுமாக அறிந்திருப்பீர்கள். தினமும் ஒரு முறையாவது இவர்களுக்கு நலம் விசாரித்தோ, பணிபற்றி விசாரித்தோ, குடும்பம்பற்றியோ அக்கறையுடன் நலம் விசாரித்து மெயில்கள் அனுப்புவது நலம்.
கவனிக்க...
இவர்கள் நெருக்கமான நண்பர்கள். ஆதலால் ஃபார்மலாக மெயில் அனுப்புவது தேவை இல்லை. அவரை நேரில் சந்தித்தால், எப்படி உரையாடுவீர்களோ அந்தத் தொனியிலேயே மெயில்கள் இருப்பது உங்கள் அன்பு மனதை அவர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும்.

பிசினஸ் அசோஸியேட்ஸ்
வியாபாரம் சம்பந்தமாக உங்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் இவர்கள். ஒரு நாளில் மிக அதிகமாக இ-மெயில் பரிவர்த்தனை இவர்களுடன்தான் நடக்கும் என்பதால், ஒவ்வொரு இ-மெயில் அனுப்பும் போதும் கவனமாக இருக்க வேண்டும். கவனம் இன்றி சிறு தவறு நடந்தாலும் உங்கள் உறவு பாதிக்கப்படும். விளைவாக பிஸினஸும் பாதிக்கப்படும். 

கவனிக்க...
ஒவ்வொரு முறை மெயில் அனுப்பும்போதும் விளித்தல் முறை சரியாக இருக்க வேண்டும். ஃபார்மலாக இருப்பது மிகவும் முக்கியம்.
பெயர், பதவி சரியாகக் குறிப்பிட வேண்டும்.
அவ்வப்போது ஃபாலோ-அப் மேற்கொள்வது நல்லது.
முக்கியமான விஷயங்கள் தாமதமானால் 'ரிமைண்டர்'கள் அனுப்புவது நலம்.

க்ளையன்ட்டுகள் - நேற்று, இன்று, நாளை
எப்போதும் க்ளையன்ட்டுகளுடன் சுமுக உறவுடன் இருப்பது முக்கியம். காரணம், இன்று இருக்கும் வாடிக்கையாளர்கள், நேற்று இருந்த வாடிக்கையாளர்கள் மூலம் வந்தவர்கள். நாளை வரப்போகும் வாடிக்கையாளர்கள், இன்று இருக்கும் வாடிக்கையாளர்கள் மூலம் வருபவர்கள். 

கவனிக்க..
நம்மோடு வியாபாரத்தில் இருந்த முந்தைய நிறுவனங்களில் சில அதிகாரிகள் இடம் மாறியிருக்கலாம். தொடர்புகள் அற்றுப்போய் சில காலத்துக்குப் பிறகு மீண்டும் தொடர்புகொள்ளும்போது அவர்களின் பதவியை மட்டும் பொதுவாகக் குறிப்பிட்டு, இ-மெயில்கள் அனுப்பலாம்.
உங்கள் நிறுவனத்தில் யார் யார், எங்கெங்கே என்ன பதவியில் இருக்கிறார்கள் என்பதை இன்று இருக்கும் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவுபடுத்தும்விதமாக 'இன்ஃபர்மேஷன் போர்ட்டல்'கள் வைத்திருப்பது உங்கள் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.
தகவல் கேட்டு மெயில் அனுப்பினால் அடுத்த 24 மணி நேரங்களுக்குள் விவரங்களை அனுப்பிவைப்பது நன்று.

முன்னாள் நண்பர்கள்
சில காலம் பழகிவிட்டு, சூழ்நிலைகளால் நம்மைவிட்டுப் பிரிந்தவர்கள். இவர்கள் எல்லோரும் இந்த வகை வட்டத்தில் வருபவர்கள்.

கவனிக்க...
உங்கள் நட்பின் ஆழத்தைப் பொறுத்து மெயில்கள் அனுப்பலாம்.
அவர் என்றோ ஒருநாள் உங்களுக்கு இழைத்த தவறை நினைவுபடுத்தும்விதமாக இ-மெயில்கள் அனுப்புவதைத் தவிர்க்கவும்.
இவ்வளவு நாள் ஒரு போன்கூட செய்யாதவர் திடீரென்று உங்கள் இ-மெயில் கேட்டால், அலுவலகப் பயன்பாட்டுக்கு உள்ள இ-மெயில் முகவரியைத் தருவதைவிட பெர்சனல் இணைய முகவரியைத் தருவது நலம்.

சமூக வலைதள நண்பர்கள்
ஆர்குட், ஃபேஸ்புக், டிவிட்டர், லிங்கட் என சமூக வலைதளங்களில் உலவும் நண்பர்கள் என்று சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. உங்கள் நண்பர், அவருடைய நண்பர், நண்பரின் நண்பர் என்று உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களும் கைகுலுக்குவதால் இந்த நட்பு வட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கவனிக்க...
முகம் தெரியாத நண்பர்களுடன் வெகு நேரம் சாட் செய்ய வேண்டாம்.
நீங்கள் இடும் தகவல்கள் அனைவராலும் உடனுக்குடன் படிக்கப்படும் என்பதால், தகாத வார்த்தைகள் உபயோகிப்பதைத் தவிர்க்கவும். அதேபோல ஒரு நண்பரைப்பற்றி இன்னொருவரின் 'ஸ்கிராப்'பில் போஸ்ட் செய்ய வேண்டாம்.

சர்க்கிள் ஆஃப் ஸ்பியர்
இதை இப்படியும் சொல்லலாம். தெரிந்தவர்கள், ஆனால் நண்பர்கள் அல்ல. ஏதோ ஒரு விழாவில், அல்லது பிசினஸ் மீட்டிங்கில் அல்லது காலேஜ் கல்ச்சுரல்ஸில் சந்தித்திருப்பீர்கள். டைம்பாஸுக்காகப் பேச்சு வளர்ப்பீர்கள். சும்மானாச்சுக்கும் 'உங்கள் இ-மெயில் ஐ.டி-யைக் கொடுங்களேன்' என்பீர்கள். அவரும் தருவார். நீங்களும் தருவீர்கள். உங்களுக்கு அவரைத் தெரியும். அவருக்கு உங்களைத் தெரியும். ஆனால், 'உண்மையில்' ஒருவரைப்பற்றி ஒருவர் ஆழமாகத் தெரிந்துவைக்காமல் இருப்பீர்கள்.

கவனிக்க...
ஒன்றுக்கும் உதவாத மெயில்களை 'ஜஸ்ட் லைக் தட்' ஃபார்வேர்டு செய்வார்கள். அதை நீங்களும் ஃபார்வேர்டு செய்து நேரத்தை வீணாக்க வேண்டாம்.
தெரியாதவர்கள்
எல்லா விளம்பர நிறுவனங்களிடத்திலும் உங்களின் இ-மெயில் முகவரி இருக்கும். இதை வாங்கிக்கொள்ளுங்கள், அதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று மெயில்களை அனுப்புவார்கள். இவர்கள் இந்த வகைக்குள் வருபவர்கள்.

கவனிக்க...
முடிந்தவரை இப்படிப்பட்ட இ-மெயில்களுக்குப் பதில் அனுப்பாமல் இருப்பது நல்லது.

பொது விருப்பங்கள்
ஷகிராவின் பாப் பாடல்களில் உங்களுக்கு விருப்பம் இருக்கலாம். அல்லது நேஷனல் ஜியாக்ரஃபியின் போட்டோக்களுக்கோ ரசிகராக இருக்கலாம். உங்களைப் போன்றே இதே அலைவரிசையில் இருக்கும் நபர்கள் இணையத்தில் இருப்பார்கள். இவர்களை எல்லாம் 'கம்யூனிட்டி' என்பதற்குக் கீழே கொண்டு வர முடியும். 

கவனிக்க...
இத்தகைய கம்யூனிட்டிகளில் இணைவது உங்களுக்குத் துறை சார்ந்த நெட்வொர்க்கை அதிகமாக்கும்.
நன்றி : விகடம்.காம் 

Thursday, August 26, 2010

மரங்களை வெட்டுங்கள்..


 
மரங்களை வெட்டுங்கள்..
உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.
 
மண்ணின் வில்லன்

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்'(வேலிகாத்தான் மரம்) தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'


ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.
 
இதன் கொடூரமான குணங்கள்

இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!


இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.


தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.
 
உடம்பு முழுதும் விஷம்

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.


காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.


அறியாமை


நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.


கேரளாவின் விழிப்புணர்வு


நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??


ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.


நல்ல மரம் ஆரோக்கியம்


வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .


சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?


இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

Wednesday, August 25, 2010

வருங்காலத் தொழில்நுட்பம்

-காமர்ஸ், சமூக ஊடகம் என இணைய உலகில் புதிய பிசினஸ் மாடல்கள் வந்து
பில்லியன்களைக் குவிப்பதை கலிஃபோர்னியாவின் தங்கத் தேடலுக்கு (Gold Rush) நிகரானதாக சென்ற வாரக் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன். ஏழு வருடங்களே நீடித்த தங்கத் தேடல் மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியைக் கொடுத்து இருந்தாலும், தங்கத்தால் வந்த நேரடிச் செல் வம் சிலரைக் கொழுத்த பணக்காரர்களாக்க, தங்கம் தேடி வந்த பலர், கடுமையான உழைப்புக்குப் பின்ன ரும் கிட்டத்தட்ட வெறுங்கையோடு திரும்பிப் போனதுதான் உண்மை. அதே நேரத்தில், தங்கம்தேடப் போனவர்களால் கோடாரி, சுத்தியல் உள்ளிட்ட இத் யாதி கருவிகளின் விற்பனை குறிப்பிடத்தகுந்த அள வுக்கு வெற்றி பெற்றது. பரவலாக இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கும் ஜீன்ஸ் பேன்ட், தங்கத் தேடலின்போது ஏற்பட்ட தற்செயல் தொழில்வெற்றி தான்.

24 வயதான Levi Strauss நியூயார்க்கில் இருந்து புறப்பட்டு கலிஃபோர்னியா வந்தது, தங்கம் தேடி உழைக்கும் தொழிலாளர்களுக்கு, அவர்கள் வேலை பார்க்கும் சுரங்கங்களின் அருகே கூடாரம் போட்டு உலர் பழங்களை விற்பதற்காகத்தான். கூடாரம் அமைக் கக் கொண்டுவந்த முரட்டுத் துணி கால்சராய் தைக் கப் பயன்பட்டு, அதன்மூலம் Levis என்ற மிகப் பிரபல மான பிராண்ட் உருவானது குருட்டு அதிர்ஷ்டமே. இணையத்திலும், இது போன்ற வெற்றி (மற்றும் தோல்வி) கதைகளுக்குக் குறைவு இல்லை.
சென்ற வாரத்தில் பயனீட்டாளர்களின் இணையப் பயன்பாட்டுத் தகவல்களைச் சேகரித்து, அதில் இருந்து அவர்களின் ஆளுமையையும் அவர்களுடனான வியாபார நிகழ்வுகளில் இருக்கும் சாதக, பாத கங்களையும் கண நேரத்தில் அலசி ஆராய்ந்து கணிக்கும் இணைய தொழில்நுட்பங்கள் தொடர்ந்து பெருகி வருவது கவலைக்கு உரியது.

இது எப்படி வேலை செய்கிறது என்பதைப் பார்க்கலாம்.
திருச்சிக்காரரான பிரபுவுக்கு வேலை கோயம்புத்தூரில். பணிபுரியும் அலுவலகம் தவிர, வீட்டிலும் இணைய வசதிகொண்ட கணினி மூலம் வலைதளங்களை மேய்வது உண்டு. அவ்வப்போது திருச்சி செல்கையில் பிரவுசிங் சென்டர் செல்வதும் வழக்கம். இணையத்தில் இ-மெயில் தவிர, ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் சில வலைப்பதிவுத் தளங்களில் தொடர்ந்து மேய்வது உண்டு. இதோடு, நண்பர்கள் யாராவது அனுப்பும் வலைதள லிங்குகளைச் சொடுக்கி அவற்றைப் படித்து, பின்னூட்டங்கள் இடுவதும் பிரபுவின் வழக்கம்.

பிரபு தமது வலைதளத்துக்கு முதல்முறை வந்து விட்டு, மீண்டும் வரும்போது அவரது வசதிக்காகஎன வலைதளங்கள் சில தகவல்களை Cookie எனப் படும் குட்டி சைஸ் கோப்புகளில் சேமித்துவைப் பது வழக்கம். ஆனால், இந்த Cookieகள் அனைத் தையும் ஒரு மென்பொருளால் படிக்க முடிந்தால்? அதுதான் இந்தத்தொழில்நுட்பத்தின் அடிப்படை!

பல்வேறு கணினிகளில் இருந்தும், வெவ்வேறு ஊர்களில் இருந்தும் பிரபு வலைதளங்களுக்குச் சென்றாலும், அவரது வலையலசல் வரலாற்றை (Browsing History) அலசிப்பார்த்து அவரைப்பற்றிய விவரங்களைத் தொகுத்தெடுத்து பிரபுவைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைக் கணிக்க முடியும். 'இவர் 23 - 28 வயதுடைய, கோயம்புத்தூரிலும்திருச்சி யிலும் நாட்களைக் கழிக்கும் பட்டதாரி. புத்தகங்கள் படிப்பதிலும், திரைப்படங்கள் பார்ப்பதிலும் ஆர் வம் அதிகம். கடந்த 6 முதல் 18 மாதங்களுக்குள் டெல்லிக்குப் பயணித்திருக்கிறார்!' என்று தோராயமாகவும் துல்லியமாகவும் பிரபுவைப் பற்றிய தகவலைச் சலித்துச் சொல்ல முடியும். பிரபு இதுவரை சென்றிருக்காத வலைதளங்கள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அவர் வருகை தரும்போது மிகக் குறிப்பிட்ட (Targeted) செய்திகளையும் விளம்பரங்களையும் கொடுக்க முடியும். இப்போது பரவலாக வலைதளங்களில் காணப்படும் ஃபேஸ்புக்கின் Like இணைப்புகளின் பின்னணி மற்றும் நோக்கம் இதுதான். பயனீட்டு அனு பவத்தைச் செம்மைப்படுத்துவற்கு மட்டும் இதைச் செய்தால் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், இந்தத் தொழில்நுட்பம் அதற்காகப் பயன்படாமல், கிட்டத்தட்ட பயனீட்டாளர்களை உளவு பார்க்கும் வேலை செய்வதுதான் பிரச்னையே!

உதாரணத்துக்கு, பிரபு கிரெடிட் கார்டு ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம். கிரெடிட் கார்டைக் கொடுக்கும் நிறுவனம் பிரபு தமது வலைதளத்தில் கார்டுக்கான விண்ணப்பத்தில் விவரங்களைக் கொடுத்துக்கொண்டு இருக்கும் அதே வேளையில், பிரபுவைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து, அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளலாம்; நிராகரிக்கலாம் அல்லது அதிக வட்டிக்கான கார்டைக் கொடுக்கலாம். உதாரண மாக, பெண்ணுக்குப் பார்த்து இருக்கும் மாப்பிள்ளைப் பையனின் வண்டவாளங்களையோ பையனுக்குப் பார்த்து இருக்கும் பெண்ணின் சேட்டைகளையோ நொடியில் கண்டுபிடிப்பது சாத்தியம். மேட்ரிமோனியல் வலைதளங்கள் மேற்கண்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தகவல் சேகரித்துப் பெண்/ஆண் வீட்டாருக்கு விற்க முடியும்.

வேலைவாய்ப்பு, உயர் கல்வி போன்ற ஒவ்வொரு துறையிலும் இப்படி எடுக்கப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தத் தொடங்கினால், பயனீட்டாளர்களின் பிரைவஸி அதோகதி என்ப தால், இந்தத் தொழில்நுட்பத் தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற குரல் இணைய உலகில் கேட்கத் தொடங்கி இருக்கிறது.

டிவிட்டர் வேகமாக வளர்ந்து வருவதை அவர்களின் ஜூன் மாதப் புள்ளிவிவரத்தில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. 110 சதவிகிதம் அதிகமாகப் பயனீட்டாளர் எண்ணிக்கையிலும், அனுப்பப் படும் டிவிட்டுகளிலும் வளர்ச்சி இருப்பதற்குக் காரணம், ஆசியாவில் இருந்து இணைபவர்களால்தான் என்பதை, தமிழ் கூறும் நல்லுலகில் பதிவர்களில் இருந்து, பலான தளங்கள் வரை டிவிட்ட ஆரம்பித்து இருப்பதில் இருந்து தெரியவருகிறது.

இதைக் கொண்டாடும் வகையில், டிவிட் ஸ்டைல் சுருக் விவரங்கள் சில:
இணையப் பயனீட்டையே மாற்றிவிடும் என்று ஏக பில்ட் அப் கொடுத்துத் தொடங்கப்பட்ட கூகுள், வேவ் தொழில்நுட்பத்தை நிறுத்திக்கொள்ளப்போவ தாக அறிவிப்பு. வேவின் பிறப்பையும் இறப்பையும் பற்றிய விக்கி உரலி http://en.wikipedia.org/wiki/Google_Wave
பயனீட்டாளர்களின் ஆதரவு அதிகம் இல்லை என்பதால் வேவ் தொழில்நுட்பத்தை நிறுத்தப்போவதாகச் சொல்லி இருந்தாலும், ரகசியமாக அவர்கள் தயாரித்தபடி இருக்கும் Google Me சமூக ஊடகத் தொழில்நுட்பத்தை வெளியிடும் வகையில் இதைச் செய்திருக்க வேண்டும் என்பது எனது யூகம்.
அடுத்து என்ன? பஸ்ஸையும் (buzz.google.com) காலி செய்துவிடுவார்களா? பார்க்கலாம்!
ஆப்பிளின் iPad-க்குப் போட்டியாக Dell நிறுவனம் Streak என்ற கணினிக் குளிகை சாதனத்தை இந்த வாரம் வெளியிடுகிறது. யாராவது வாங்கிப் பயன்படுத்தினால், பின்னூட்டம் கொடுங்கள், ப்ளீஸ்!
 நன்றி : விகடன்.காம்