1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Thursday, August 26, 2010

மரங்களை வெட்டுங்கள்..


 
மரங்களை வெட்டுங்கள்..
உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.
 
மண்ணின் வில்லன்

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்'(வேலிகாத்தான் மரம்) தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'


ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.
 
இதன் கொடூரமான குணங்கள்

இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!


இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.


தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.
 
உடம்பு முழுதும் விஷம்

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.


காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.


அறியாமை


நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.


கேரளாவின் விழிப்புணர்வு


நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??


ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.


நல்ல மரம் ஆரோக்கியம்


வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .


சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?


இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

Wednesday, August 25, 2010

வருங்காலத் தொழில்நுட்பம்

-காமர்ஸ், சமூக ஊடகம் என இணைய உலகில் புதிய பிசினஸ் மாடல்கள் வந்து
பில்லியன்களைக் குவிப்பதை கலிஃபோர்னியாவின் தங்கத் தேடலுக்கு (Gold Rush) நிகரானதாக சென்ற வாரக் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன். ஏழு வருடங்களே நீடித்த தங்கத் தேடல் மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியைக் கொடுத்து இருந்தாலும், தங்கத்தால் வந்த நேரடிச் செல் வம் சிலரைக் கொழுத்த பணக்காரர்களாக்க, தங்கம் தேடி வந்த பலர், கடுமையான உழைப்புக்குப் பின்ன ரும் கிட்டத்தட்ட வெறுங்கையோடு திரும்பிப் போனதுதான் உண்மை. அதே நேரத்தில், தங்கம்தேடப் போனவர்களால் கோடாரி, சுத்தியல் உள்ளிட்ட இத் யாதி கருவிகளின் விற்பனை குறிப்பிடத்தகுந்த அள வுக்கு வெற்றி பெற்றது. பரவலாக இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கும் ஜீன்ஸ் பேன்ட், தங்கத் தேடலின்போது ஏற்பட்ட தற்செயல் தொழில்வெற்றி தான்.

24 வயதான Levi Strauss நியூயார்க்கில் இருந்து புறப்பட்டு கலிஃபோர்னியா வந்தது, தங்கம் தேடி உழைக்கும் தொழிலாளர்களுக்கு, அவர்கள் வேலை பார்க்கும் சுரங்கங்களின் அருகே கூடாரம் போட்டு உலர் பழங்களை விற்பதற்காகத்தான். கூடாரம் அமைக் கக் கொண்டுவந்த முரட்டுத் துணி கால்சராய் தைக் கப் பயன்பட்டு, அதன்மூலம் Levis என்ற மிகப் பிரபல மான பிராண்ட் உருவானது குருட்டு அதிர்ஷ்டமே. இணையத்திலும், இது போன்ற வெற்றி (மற்றும் தோல்வி) கதைகளுக்குக் குறைவு இல்லை.
சென்ற வாரத்தில் பயனீட்டாளர்களின் இணையப் பயன்பாட்டுத் தகவல்களைச் சேகரித்து, அதில் இருந்து அவர்களின் ஆளுமையையும் அவர்களுடனான வியாபார நிகழ்வுகளில் இருக்கும் சாதக, பாத கங்களையும் கண நேரத்தில் அலசி ஆராய்ந்து கணிக்கும் இணைய தொழில்நுட்பங்கள் தொடர்ந்து பெருகி வருவது கவலைக்கு உரியது.

இது எப்படி வேலை செய்கிறது என்பதைப் பார்க்கலாம்.
திருச்சிக்காரரான பிரபுவுக்கு வேலை கோயம்புத்தூரில். பணிபுரியும் அலுவலகம் தவிர, வீட்டிலும் இணைய வசதிகொண்ட கணினி மூலம் வலைதளங்களை மேய்வது உண்டு. அவ்வப்போது திருச்சி செல்கையில் பிரவுசிங் சென்டர் செல்வதும் வழக்கம். இணையத்தில் இ-மெயில் தவிர, ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் சில வலைப்பதிவுத் தளங்களில் தொடர்ந்து மேய்வது உண்டு. இதோடு, நண்பர்கள் யாராவது அனுப்பும் வலைதள லிங்குகளைச் சொடுக்கி அவற்றைப் படித்து, பின்னூட்டங்கள் இடுவதும் பிரபுவின் வழக்கம்.

பிரபு தமது வலைதளத்துக்கு முதல்முறை வந்து விட்டு, மீண்டும் வரும்போது அவரது வசதிக்காகஎன வலைதளங்கள் சில தகவல்களை Cookie எனப் படும் குட்டி சைஸ் கோப்புகளில் சேமித்துவைப் பது வழக்கம். ஆனால், இந்த Cookieகள் அனைத் தையும் ஒரு மென்பொருளால் படிக்க முடிந்தால்? அதுதான் இந்தத்தொழில்நுட்பத்தின் அடிப்படை!

பல்வேறு கணினிகளில் இருந்தும், வெவ்வேறு ஊர்களில் இருந்தும் பிரபு வலைதளங்களுக்குச் சென்றாலும், அவரது வலையலசல் வரலாற்றை (Browsing History) அலசிப்பார்த்து அவரைப்பற்றிய விவரங்களைத் தொகுத்தெடுத்து பிரபுவைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைக் கணிக்க முடியும். 'இவர் 23 - 28 வயதுடைய, கோயம்புத்தூரிலும்திருச்சி யிலும் நாட்களைக் கழிக்கும் பட்டதாரி. புத்தகங்கள் படிப்பதிலும், திரைப்படங்கள் பார்ப்பதிலும் ஆர் வம் அதிகம். கடந்த 6 முதல் 18 மாதங்களுக்குள் டெல்லிக்குப் பயணித்திருக்கிறார்!' என்று தோராயமாகவும் துல்லியமாகவும் பிரபுவைப் பற்றிய தகவலைச் சலித்துச் சொல்ல முடியும். பிரபு இதுவரை சென்றிருக்காத வலைதளங்கள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அவர் வருகை தரும்போது மிகக் குறிப்பிட்ட (Targeted) செய்திகளையும் விளம்பரங்களையும் கொடுக்க முடியும். இப்போது பரவலாக வலைதளங்களில் காணப்படும் ஃபேஸ்புக்கின் Like இணைப்புகளின் பின்னணி மற்றும் நோக்கம் இதுதான். பயனீட்டு அனு பவத்தைச் செம்மைப்படுத்துவற்கு மட்டும் இதைச் செய்தால் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், இந்தத் தொழில்நுட்பம் அதற்காகப் பயன்படாமல், கிட்டத்தட்ட பயனீட்டாளர்களை உளவு பார்க்கும் வேலை செய்வதுதான் பிரச்னையே!

உதாரணத்துக்கு, பிரபு கிரெடிட் கார்டு ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம். கிரெடிட் கார்டைக் கொடுக்கும் நிறுவனம் பிரபு தமது வலைதளத்தில் கார்டுக்கான விண்ணப்பத்தில் விவரங்களைக் கொடுத்துக்கொண்டு இருக்கும் அதே வேளையில், பிரபுவைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து, அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளலாம்; நிராகரிக்கலாம் அல்லது அதிக வட்டிக்கான கார்டைக் கொடுக்கலாம். உதாரண மாக, பெண்ணுக்குப் பார்த்து இருக்கும் மாப்பிள்ளைப் பையனின் வண்டவாளங்களையோ பையனுக்குப் பார்த்து இருக்கும் பெண்ணின் சேட்டைகளையோ நொடியில் கண்டுபிடிப்பது சாத்தியம். மேட்ரிமோனியல் வலைதளங்கள் மேற்கண்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தகவல் சேகரித்துப் பெண்/ஆண் வீட்டாருக்கு விற்க முடியும்.

வேலைவாய்ப்பு, உயர் கல்வி போன்ற ஒவ்வொரு துறையிலும் இப்படி எடுக்கப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தத் தொடங்கினால், பயனீட்டாளர்களின் பிரைவஸி அதோகதி என்ப தால், இந்தத் தொழில்நுட்பத் தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற குரல் இணைய உலகில் கேட்கத் தொடங்கி இருக்கிறது.

டிவிட்டர் வேகமாக வளர்ந்து வருவதை அவர்களின் ஜூன் மாதப் புள்ளிவிவரத்தில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. 110 சதவிகிதம் அதிகமாகப் பயனீட்டாளர் எண்ணிக்கையிலும், அனுப்பப் படும் டிவிட்டுகளிலும் வளர்ச்சி இருப்பதற்குக் காரணம், ஆசியாவில் இருந்து இணைபவர்களால்தான் என்பதை, தமிழ் கூறும் நல்லுலகில் பதிவர்களில் இருந்து, பலான தளங்கள் வரை டிவிட்ட ஆரம்பித்து இருப்பதில் இருந்து தெரியவருகிறது.

இதைக் கொண்டாடும் வகையில், டிவிட் ஸ்டைல் சுருக் விவரங்கள் சில:
இணையப் பயனீட்டையே மாற்றிவிடும் என்று ஏக பில்ட் அப் கொடுத்துத் தொடங்கப்பட்ட கூகுள், வேவ் தொழில்நுட்பத்தை நிறுத்திக்கொள்ளப்போவ தாக அறிவிப்பு. வேவின் பிறப்பையும் இறப்பையும் பற்றிய விக்கி உரலி http://en.wikipedia.org/wiki/Google_Wave
பயனீட்டாளர்களின் ஆதரவு அதிகம் இல்லை என்பதால் வேவ் தொழில்நுட்பத்தை நிறுத்தப்போவதாகச் சொல்லி இருந்தாலும், ரகசியமாக அவர்கள் தயாரித்தபடி இருக்கும் Google Me சமூக ஊடகத் தொழில்நுட்பத்தை வெளியிடும் வகையில் இதைச் செய்திருக்க வேண்டும் என்பது எனது யூகம்.
அடுத்து என்ன? பஸ்ஸையும் (buzz.google.com) காலி செய்துவிடுவார்களா? பார்க்கலாம்!
ஆப்பிளின் iPad-க்குப் போட்டியாக Dell நிறுவனம் Streak என்ற கணினிக் குளிகை சாதனத்தை இந்த வாரம் வெளியிடுகிறது. யாராவது வாங்கிப் பயன்படுத்தினால், பின்னூட்டம் கொடுங்கள், ப்ளீஸ்!
 நன்றி : விகடன்.காம்

Sunday, August 8, 2010

சிங்கப்பூர்

Republik Singapura
新加坡共和国
சிங்கப்பூர் குடியரசு
சிங்கப்பூரின் கொடி

குறிக்கோள்
Majulah Singapura
(மலாய் "சிங்கப்பூர் முன்னோக்கி")
நாட்டுப்பண்
முன்னேறட்டும் சிங்கப்பூர்
Location of  சிங்கப்பூரின்
தலைநகரம்
பெரிய நகரம்
சிங்கப்பூர் 1
1°17′N, 103°51′E
ஆட்சி மொழி(கள்) மலாய் , ஆங்கிலம், மேண்டரின், தமிழ்
அரசு பாராளுமன்ற குடியரசு
- அதிபர் செல்லப்பன் இராமநாதன்
- பிரதமர் லீ எசிய லூங்
விடுதலை
- ஒருதலைபட்ச பிரகடனம் (ஐ.இ. இடமிருந்து) ஆகஸ்டு 31, 1963
- அதிகாரப்பூர்வமாக ஐ.இ இடமிருந்து( மலேசியாவின் மாநிலமாக) செப்டம்பர் 16, 1963
- மலேசியாவிடமிருந்து ஆகஸ்டு 9, 1965
பரப்பளவு
- மொத்தம் 699 கிமீ² (190வது)
270 சது. மை
- நீர் (%) 1.444
மக்கள்தொகை
- ஜூலை 2005 மதிப்பீடு 4,326,000 (120வது)
- 2000 குடிமதிப்பு 4,117,700
மொ.தே.உ
(கொஆச (ppp))
2006 கணிப்பீடு
- மொத்தம் $123.4 பில்லியன் (57வது)
- நபர்வரி $29,900 (22வது)
ம.வ.சு (2003) 0.907 (உயர்) (25வது)
நாணயம் சிங்கப்பூர் வெள்ளி (SGD)
நேர வலயம் சி.சீ.நே (ஒ.ச.நே.+8)
- கோடை (ப.சே.நே.) இல்லை (UTC+8)
இணைய குறி .sg
தொலைபேசி +652
1. சிங்கப்பூர் ஒரு நகர நாடாகும்.
2. 02 மலேசியாவில் இருந்து அழைக்கும் போது
சிங்கப்பூர் குடியரசு (சீனம்: 新加坡共和国, Xīnjīapō Gònghéguó; மலாய்: Republik Singapura; ஆங்கிலம்: The Republic of Singapore) தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. சிங்கப்பூர் தீவிற்கு வடக்கில் மலேசியாவும், தெற்கில் இந்தோனீசிய ரியாவு (Riau) தீவுகளும் உள்ளன.
சிங்கப்பூர் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியால் 1819ல் ஆக்கிரமிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்களால் சிறிது காலம் ஆட்சியில் இருந்த சிங்கப்பூர் மறுபடியும் 1945ல் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்து பிறகு 1963ல் மலேசியாவோடு இணைக்கப்பட்டது. ஆகஸ்ட் 9, 1965 அன்று மலேசியாவில் இருந்து பிரிந்து, விடுதலை பெற்று தனி குடியரசு நாடாக உருவானது.
மிகவும் சிறிய பரப்பளவு கொண்ட சிங்கப்பூர், தென்கிழக்குஆசியாவில் மிகச்சிறிய, மற்றும் உலகிலேயே மூன்றாவது மிகச்சிறிய நாடாகும். எனினும் அன்னியர் செலவாணியில் சிங்கபூரிடம் அமெரிக்க வெள்ளி 172 பில்லியன் $ உள்ளது. விடுதலைக்கு பின் நடந்த பல்வேறு பொருளாதார மாற்றங்களினாலும், அரசின் துணையோடு தன் உள்கட்டுமானத்தினை தரப்படுத்திக் கொண்டதாலும், சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கை தரம் பல்மடங்கு உயர்ந்துள்ளது.

வரலாறு

பெயர்க்காரணம்

சிங்கப்பூர் சிங்கம் +ஊர் சிங்கப்பூர் அதாவது சிங்கத்தின் ஊர் என்ற தமிழ் பொருளை கொண்டதும் ஆகும் சிங்கப்பூர் என்ற பெயர் சிங்கப்பூரா என்ற மலாய் சொல்லிருந்து மருவியதாகவும் கூறப்படுகிறது. மலாய் சொற்களான சிங்கா (சிங்கம்) மற்றும் பூரா (ஊர்) சேர்ந்து சிங்கப்பூரா என்று அழைக்கப்படுகிறது. மலாய் வரலாற்றின் படி 14ம் நூற்றாண்டு சுமாத்திரா மலாய் இளவரசர் சாங் நிலா உத்தமா, ஒரு கடும் புயலின் போது இந்த தீவில் ஒதுங்கினார். அப்போது அவர் சிங்கம் போல ஒரு மிருகத்தை பார்த்து, சிங்கம் என்று தவறுதலாக நினைத்துக்கொண்டு சிங்கபூரா என்று அழைத்ததாக வரலாற்றுக்கதையும் உண்டு .

முந்தைய வரலாறு

சிங்கப்பூரின் வரலாறு 14 ஆம் நூற்றாண்டிலிருந்து குறிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன் சிங்கப்பூரும் மலேசியாவும் கடாரம் கொண்ட சோழ மண்டலத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கலாம் என்று தமிழ்நாட்டின் வரலாறு காட்டுகிறது. 14ம் நூற்றாண்டில் அது துமாசிக் என்ற பெயர் கொண்ட நகரமாக காட்சியளித்தது. அது சுமாத்திராவில் இயங்கிய ஸ்ரீ விஜய சாம்ராச்சியத்தின் ஆட்சிக்கு உட்பட்டது. சிங்கை தீவில் ஒரு நகரம் இருந்தது என்றும் அந்த நகரம் தென்கிழக்காசியாவில் ஒரு முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது என்று மலாய் மக்களின் வரலாறு கூறுகிறது.
ஸ்ரீவிஜய பேரரசு மறைந்த பிறகு, துமாசிக் மற்ற அரசுகளால் தாக்கப்பட்டது. ஜாவாவில் இருந்த மாஜாபாஹித் பேரரசு, தாய்லாந்தில் இயங்கிய அயுத்திய அரசு போன்றவை அந்த நகரை தம் ஆட்சிக்குள் கொண்டு வர முயன்றன. தாய்லாந்தின் அயுத்திய அரசு குறைந்தது ஒரு முறை துமாசிக் தீவைத் தாக்க முயன்று தோல்வி அடைந்தது என்று வரலாறு காட்டுகிறது. அந்நேரத்தில் - 15ம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் - துமாசிக் நகருக்கு "சிங்கப்பூரா" என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது.

குடியேற்றவாத ஆட்சி



தொமஸ் ஸ்டேம்ஃபர்ட் ராஃபிள்ஸ்
1819 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள், சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ் என்பார் தலைநிலப்பகுதியில் வந்து இறங்கினார். இப்பகுதியின் புவியியல் அமைவிட முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட அவர், வணிக நிலையொன்றை அமைப்பதற்காக 1819 பெப்ரவரி மாதம் 6 ஆம் தேதி சுல்தான் ஹுசேன் ஷாவுடன் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி சார்பில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். இவ்வொப்பந்தப்படி சிங்கப்பூரின் தெற்குப்பகுதியில் வணிக நிலையொன்றையும், குடியேற்றம் ஒன்றையும் அமைக்கும் உரிமையைப் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி பெற்றுக்கொண்டது. ஆகஸ்ட் 1824 ஆம் ஆண்டுவரை சிங்கப்பூர் மலே ஆட்சியாளரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவே இருந்தது. ஆகஸ்ட் 1824ல் பிரித்தானியா முழுத்தீவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது சிங்கப்பூர் ஒரு பிரித்தானியக் குடியேற்றநாடு ஆகியது. சிங்கப்பூரிலிருந்த இரண்டாம் வதிவிட அதிகாரியான ஜான் குரோபுர்ட் என்பவரே சிங்கப்பூரை பிரித்தானியாவுக்கு உரியதாக்கியவர். இவர் 1824 ஆகஸ்ட் 2 ஆம் தேதி சுல்தான் ஹுசேன் ஷாவுடன் ஒப்பந்தமொன்றைச் செய்தார். இதன் அடிப்படையில் சுல்தான் தீவு முழுவதையும் பிரித்தானியாவுக்குக் கையளித்தார். இதுவே நவீன சிங்கப்பூரின் தொடக்கம் எனலாம். ராபிள்சின் உதவி அதிகாரியான வில்லியம் பர்குகார் (William Farquhar) சிங்கப்பூரின் வளர்ச்சியையும், பல்லின மக்களின் உள்வருகையையும் ஊக்கப்படுத்தினார். இந்த உள்வருகை கட்டுப்பாடற்ற வருகுடியேற்றக் கொள்கை காரணமாக ஏற்பட்டது. 1856 ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானிய இந்திய அலுவலகம் சிங்கப்பூரை ஆட்சிசெய்தது. ஆனால் 1867 ஆம் ஆண்டில், சிங்கப்பூர், மக்கள் பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்ற நாடாக, பிரித்தானிய அரசரின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டது. 1869 ஆம் ஆண்டளவில் சுமார் 100,000 மக்கள் இத்தீவில் வாழ்ந்தனர். சிங்கப்பூரின் முதலாவது நகரத் திட்டமிடல் முயற்சி ஒரு பிரித்தாளும் உத்தியாகவே மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டப்படி தீவின் தெற்கு பகுதியில் வெவ்வேறு இன மக்கள் தனித்தனிப் பகுதிகளில் குடியேற்றப்பட்டனர்.
சிங்கப்பூர் ஆறு, பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த வணிகர்களும், வங்கியாளர்களும் நிறைந்த பகுதியாக விளங்கியது. சீன, இந்தியக் கூலித் தொழிலாளர்கள் படகுகளில் பொருட்களை ஏற்றியிறக்கும் வேலை செய்துவந்தனர். மலாயர்கள் பெரும்பாலும் மீனவர்களாகவும், கடலோடிகளாகவும் இருந்தனர். அராபிய வணிகரும், அறிஞர்களும் ஆற்றுக் கழிமுகத்தின் தென்கிழக்குப் பகுதியில் வாழ்ந்தனர். அக்காலத்தில் மிகவும் குறைவாகவேயிருந்த ஐரோப்பியக் குடியேற்றக்காரர் கானிங் ஹில் கோட்டைப் பகுதியிலும், ஆற்றின் மேல் பகுதிகளிலும் வாழ்ந்தனர். ஐரோப்பியரைப் போலவே இந்தியர்களும் தீவின் உட்பகுதியிலேயே குடியேறினர். இன்று சின்ன இந்தியா என்று அழைக்கப்படும் பகுதி இருக்கும் இடமே இது. விடுதலைக்குப் பின்னர் 1960களில் பெருமெடுப்பிலான மீள்குடியெற்ற நடவடிக்கைகளின்போது அறிபப்பட்டது தவிர, அக்காலத்தின் நாட்டுப்புறத் தனியார் குடியேற்றங்கள் பற்றி மிகக்குறைவாகவே அறியவருகிறது.

உலகப்போர்

பினாங்கு, மலாக்கா ஆகிய நகரங்களுடன் சிங்கப்பூர் நீரிணைக் குடியேற்றங்களின் (Straits Settlements) ஒரு பாகமாக இருந்தது. யப்பானியருடைய எழுச்சிக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே அவர்கள் வேகமாகத் தமது படைகளைப் பெருக்கிவருவதைப் பிரித்தானியா அறிந்திருந்தது. தென்கிழக்காசியாவில் இருந்த தமது சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக சிங்கப்பூரின் வட முனையில் கடற்படைத் தளம் ஒன்றை அமைப்பதற்குப் பிரித்தானியா முடிவு செய்திருந்தது. ஆனால் ஜேர்மனியுடன் ஏற்பட்ட போரினால் போர்க் கப்பல்களையும், தளவாடங்களையும் ஐரோப்பாவுக்குக் கொண்டுவரவேண்டி இருந்ததனால் இத் திட்டம் நிறைவேறவில்லை. இரண்டாம் உலகப் போரின் போது யப்பானியப் படைகள் மலாயாவைக் கைப்பற்றிக் கொண்டன. அப்படைகள் சிங்கப்பூரைத் தாக்கியபோது, பெரும்பாலான தமது படைகளை ஐரோப்பாவுக்கு அனுப்பிவிட்டுக் குறைந்த படைபலத்துடன் இருந்த பிரித்தானியர் 6 நாட்களில் தோல்வியடைந்ததுடன், புகமுடியாதது என்று சொல்லப்பட்ட கோட்டையையும் 1942 பெப்ரவரி 15 ஆம் தேதி யப்பானியத் தளபதி தொமோயுக்கி யாமாஷித்தாவிடம் (Tomoyuki Yamashita) ஒப்படைத்துச் சரணடைந்தனர். இத்தோல்வியை "பெரும் இழப்பு" என்றும் "பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய சரணாகதி" என்றும் அப்போதைய பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் குறிப்பிட்டார். சிங்கப்பூரின் கடற்படைத் தளத்தை யப்பானியர் பயன்படுத்தாமல் இருப்பதற்காக, அது யப்பானியரிடம் வீழ்ச்சியடையு முன்பே அழிக்கப்பட்டுவிட்டது. யப்பானியர் சிங்கப்பூரின் பெயரை "ஷோவாவின் காலத்தில் பெறப்பட்ட தெற்குத் தீவு" என்னும் யப்பானியத் தொடரைச் சுருக்கி "ஷொனான்டோ" என மாற்றினர். உலகப் போரில் யப்பானியர் தோல்வியுற்ற ஒரு மாதத்தின் பின்னர் 1945 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் தேதி சிங்கப்பூர் மீண்டும் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.

தற்போதைய சிங்கப்பூர்



சிங்கப்பூர் துறைமுகம்
1959 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பிரித்தானியப் பேரரசினுள் ஒரு தன்னாட்சி பெற்ற நாடானது. யூசோஃப் பின் இசாக் என்பவர் நாட்டுத் தலைவராகவும், லீ குவான் யூ பிரதமராகவும் ஆயினர். 1963 ஆகஸ்டில் சிங்கப்பூர் ஒருதலைப் பட்சமாகத் தன்னை முழு விடுதலைபெற்ற நாடாக அறிவித்துக் கொண்டது. 1963 ஆம் ஆண்டு செப்டெம்பரில் மலாயா, சாபா, சரவாக் ஆகியவற்றுடன் சேர்ந்து மலேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது. இரண்டு ஆண்டுகள் கழித்து சிங்கப்பூரில் ஆட்சியிலிருந்த மக்கள் செயர் கட்சிக்கும் கோலாலம்பூரில் இருந்த மத்திய அரசுக்கும் இடையில் ஏற்பட்ட கொள்கை வேறுபாடுகள் காரணமாக 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி சிங்கப்பூர், மலேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி இறைமையுள்ள நாடானது. யூசோப் பின் இஷாக் சிங்கப்பூரின் முதலாவது தலைவர் ஆனார். லீ குவான் யூ பிரதமராகத் தொடர்ந்தார்.
சிங்கப்பூர் தன்னிறைவு பெற முயன்ற வேளையில், பெருமளவிலான வேலையின்மை, வீட்டுப் பற்றாக்குறை, நிலம் மற்றும் இயற்கை வளப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை அந் நாடு எதிர் நோக்கவேண்டியிருந்தது. லீ குவான் யூ பிரதமராக இருந்த, 1959 தொடக்கம் 1990 வரையான காலப்பகுதியில் பரவலான வேலையில்லாப் பிரச்சினையைச் சமாளித்ததுடன், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திப் பெருமளவிலான வீடமைப்புத் திட்டங்களும் அமைக்கப்பட்டன. இக் காலத்திலேயே நாட்டின் பொருளாதார உள் கட்டமைப்புகள் வளர்ச்சியடைந்தன; இன முரண்பாடுகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன; ஆண்களுக்கான கட்டாய படைத்துறைச் சேவையே அடிப்படையாகக் கொண்ட ஒரு சுதந்திரமான தேசிய பாதுகாப்பு முறை உருவாக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் உலகிலேயே செல்வம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக மாறியது. அதன் GDP per capita ஐரோப்பிய நாடுகள் பலவற்றைவிட அதிகமாக இருக்கிறது. சிங்கப்பூரின் துறைமுகம் உலகில் அதிக வர்த்தகக் கப்பல்களைக் காணும் ஒன்று.

பண்பாடு

சிங்கப்பூர் பண்பாடு ஒரு கலப்புப் பண்பாடு. மலாய் மக்கள், சீனர்கள், இந்தியர்கள், அரபு நாட்டினரின் பண்பாடுகள் பின்பற்றப்படுகின்றன.

மக்கள்

ஜூன் 2006 படி சிங்கப்பூரின் மக்கள் தொகை 4.48 மில்லியன். இதில் 3.6 மில்லியன் மக்கள் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமம் பெற்றவர்கள்.

மதம்

சிங்கப்பூர் பல மதங்கள் கொண்ட ஒரு நாடு. 51% சிங்கப்பூர்வாசிகள் பௌத்தம் மற்றும் டாவோயிசம் பின்பற்றுகின்றனர். 15% மக்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் கிறித்துவத்திலும், 16% மக்கள், மலாய் மக்கள் இசுலாம் மதத்தினைப் பின்பற்றுகின்றனர். சிறுபான்மை மக்கள் பலர் இந்து சமயத்தையும், சீக்கிய சமயத்தையும் பின்பற்றுகின்றனர்.

மொழி

சிங்கப்பூரின் தேசிய மொழி மலாய். சிங்கப்பூரின் தேசிய கீதம் மலாய் மொழியில் இயற்றப்பட்டுள்ளது. ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் ஆகியவை சிங்கப்பூர் அரசின் ஏற்புடைய மொழிகளாகும். சிங்கப்பூர் விடுதலை அடைந்தது முதல் ஆட்சி மொழியாக ஆங்கிலம் வளர்க்கப்பட்டுள்ளது.

லீ குவான் யூ



லீ குவான் யூ
லீ குவான் யூ (பிறப்பு செப் 16 , 1923), சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமர் (1959 - 1990) ஆவார். இவர் சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சியின் (PAP) நிறுவனர்களுள் ஒருவரும் ஆவார். பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின்னரும் ஒரு முதுநிலை அமைச்சராகப் பணியாற்றினார். சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமரான லீ சியன் லூங், இவரின் மகன் ஆவார். பிரதமர் ஆட்சியில் இருந்து இறங்கிய பின்னரும் சிங்கப்பூரின் மிக முக்கியமான அரசியல்வாதியாக இருக்கிறார். சிங்கப்பூரின் இரண்டாவது மந்திரியின் (கோ சோக் தோங்கு) கீழ் (senior minister) ஆக பணியாற்றினார். இப்பொழுது இவருக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு முக்கிய பதவி (Minister Mentor) வகித்து வருகிறார்.

குடும்பம்

லீ குவான் யூ, அவரின் வாழ்க்கை வரலாற்றில் தான் நான்காவது generation சீனத்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் மூதோதயார் லீ போக் பூன், 1846ஆம் ஆண்டு சீனாவில் உள்ள குவாங்தொங் province இல் இருந்து வெளியேறி சிங்கப்பூரின் Strait settlements க்கு வந்ததாக கூறி உள்ளார்.

Saturday, July 31, 2010

நட்பின் இலக்கணம்!

நட்பின் இலக்கணம்!

'உடுக்கை இழநதவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு' என நட்பிற்கு இலக்கணம் வகுக்கிறார் வள்ளுவர்.

எரிமலை இல்லாத, ஆறுகள் இல்லாத ஏன் திரையரங்குகள் கூட இல்லாத நாடுகள் இருக்கின்றன. ஆனால், நண்பர்கள் இல்லாத நாடுகள் என்று ஏதும் இல்லை.

அத்தகைய மகத்துவம் வாய்ந்த நட்பினை, நட்பின் உயர்வினை கொண்டாட, கூடி மகிழ அன்பினைப் பரிமாறி ஆரவாரம் செய்ய எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினமே 'நண்பர்கள் தினம்'.

வயது வரம்பு இல்லாமல், பாலினம் பாராமல் பலராலும் பருகப்படுவதும், பாராட்டப்படுவதும் தொட்டுத் தொடரும் இந்த தோழமைதான்.

ஆகஸ்ட் மாதத்தின் ஒவ்வொரு முதல் ஞாயிற்றுக் கிழமையும் நட்பு போற்றும் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

அந்நிய இறக்குமதியால் ஆயிரமாயிரம் தினங்கள் அவ்வப்போது வந்து போனாலும், நண்பர்கள் தினத்திற்கு மட்டும் என்றுமே நல்ல வரவேற்பு இருப்பதை மறுக்க முடியாது.

காதலர் தினத்தை கணிசமாக எதிர்க்கும் நம கலாச்சாரக் காவலர்கள், நண்பர்கள் தினத்திற்கு மட்டும் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து சிம்மாசனத்தில் அமர வைக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

நாடு போற்றும் நல்ல நட்பினை நம் இதிகாசங்களும், புராணங்களும் சிறப்பிக்கத் தவறவில்லை.

நட்பினை நேரில் பார்த்துத்தான் நம் நேசத்தை தெரிவிக்க வேண்டுமென்று இல்லை. பேசிப் பழகி பிரிந்து வருந்த வேண்டும் என்றும் இல்லை. இதனை நம் புராண கதைகளில் இருந்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆம்! நமக்கெல்லாம் தெரிந்த உதாரணம் கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பைக் கூறலாம். அன்று, புரவலரும், புலவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளவில்லை, பேசிக் கொள்ளவில்லை என்றாலும் நட்பின் உச்சாணிக் கொம்பில் ஏறிக் கொண்டு எல்லோருக்கும் பாடாமாய் அமைந்தார்கள்.

ஒருவரின் புகழ் பற்றி மற்றொருவர் அறிந்து நட்பு பாராட்டினார்கள். தனது நண்பர் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிரிழப்பதைக் கேள்விப்பட்டு தாமும் வடக்கிருந்து உயிர் துறந்தார் பிசிராந்தையார்.

நமது இதிகாசம் கூறும் நட்பு : கர்ணன் - துரியோதனன். தோழமை என்ற ஒரே வலிமையான ஆயுதத்திற்காக, சொந்தம் என்று தெரிந்தும் பாண்டவர்களை போரில் எதிர்த்து நின்றான் கர்ணன்.

ஒருமுறை துரியோதனின் மனைவியும், கர்ணனும் பகடை விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது துரியோதனின் மனைவி அணிந்திருந்த முத்துமாலையை கர்ணன் பற்றி இழுக்க அது அறுந்து சிதறி கீழே விழுந்தது.

அத்தருணம் அங்கே துரியோதனன் வர, நண்பனின் மனைவியிடம் தவறாக நடந்து விட்டோமோ என்ற பதைபதைப்பில் கர்ணன் நிற்க, செய்வதறியாது திகைத்து நின்றாள் துரியோதனன் மனைவி.

தனது நண்பனை சிறிதும் சந்தேகப்படாத துரியோதனன், சிதறிய முத்துக்களை 'எடுக்கவோ, கோர்க்கவோ' என தன் மனைவியைப் பார்த்துக் கேட்டான்.

நட்பு என்றால் இப்படி இருக்க வேண்டும்,என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள் இவர்கள்.

ஆனால்...

ஆண்-பெண் நட்பு என்றால் அங்கு காதல் புகுந்து விடுகிறது. இல்லையேல் காமம் தலைதூக்குகிறது என்ற அவலமான சமூகப் பார்வை இன்றைய இளைய சமுதாயம் மீது படர்ந்துள்ளது.

துளியே கடல்
என்கிறது
காமம்

கடலே துளி
என்கிறது
நட்பு

என்றார் புதுக்கவிஞர் அறிவுமதி.

அன்பு... காதல்... நட்பு என்ற மூன்றிற்கும் வித்தியாசம் தெரியாமல் இன்றைய நம் தலைமுறை குழம்பிக் கிடக்கிறது.

இவை ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்திருந்தாலும், ஒவ்வொன்றிற்கும் இடையே ஒரு மெல்லிய நூலிழை இடைவெளி இருக்கத்தான் செய்கிறது.

இதனை கவனமாய் கையாள்கிறவனுக்கு மட்டுமே காதலியுடனும், தோழியுடனும் நெருடல் இல்லாத நெருக்கம் ஏற்படும்.

நகுதல் பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு - என்றார் வள்ளுவப் பெருந்தகை.

சிரித்து மகிழ, நல்லன சொல்வதற்கு மட்டுமே அல்ல நட்பு. சிறந்த நட்பு என்பது தவறு செய்கிற போது, தடுத்து நிறுத்தி கண்டிப்பதே ஆகும் என்கிறார் வான் புகழ் கொண்ட வள்ளுவர்.

எனவே வள்ளுவரின் வாக்கிற்கேற்ப வாழ்ந்து காட்டுவோம்! வாருங்கள் நண்பர்களே!


Enhanced by Zemanta

பாடம் 15 : போட்டோசாப் (பார்ட் 2)





பாடம் 15 : போட்டோசாப்




எக்ஸெல் டிப்ஸ்!


எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் மவுஸின் ஸ்குரோல் வீலைப் பயன்படுத்தி கீழாக பல வரிசைகளைத் தாண்டி வந்துவிட்டீர்கள். நீங்கள் முதலில் பார்த்துக் கொண்டிருந்த வரிசைகளெல்லாம் உங்கள் பார்வையிலிருந்து மறந்துவிட்டன. அப்போது ஒரு ஆரோ கீயை அழுத்துகிறீர்கள். என்ன நடக்கிறது? நீங்கள் முதலில் எங்கு இருந்தீர்களோ அங்கு இருந்த செல்லுக்கு அருகே இருக்கிறீர்கள்.

இங்கு என்ன நடக்கிறது? முதலில் ஸ்குரோல் வீலைச் சுழற்றுகையில் கண் முன் இருந்த செல்களெல்லாம் காணாமல் போய் நூறு வரிசை தாண்டி எங்கோ போகிறீர்கள். பின் எப்படி முன்பு இருந்த இடத்திற்கு வருகிறீர்கள்? அதிர்ச்சி அடையாதீர்கள். இங்கு எதுவும் உங்கள் கண் பார்வையில் இருந்து மறைந்துவிடவில்லை.

அல்லது கண்களுக்கு மாயத் தோற்றம் எதுவும் தோன்றவில்லை. ஸ்குரோல் பார் அல்லது மவுஸ் வீல் கொண்டு ஸ்குரோல் செய்திடுகையில் நீங்கள் புதிய செல் எதனையும் தேர்ந்தெடுக்கவில்லை. ஸ்கிரீனில் உள்ள தோற்றம் தான் மாறுகிறது. இதனால் தான் நீங்கள் ஆரோ கீயை அழுத்தியவுடன் முன்பு எங்கிருந்தீர்களோ அந்த வரிசைக்கு அருகேயுள்ள வரிசையில் கர்சருடன் இருக்கிறீர்கள். இதில் நமக்கு ஒரு அனுகூலம் உள்ளது. நாம் செயலாற்றும் செல் அருகே இருந்து கொண்டு ஒர்க் ஷீட் முழுவதும் ஒரு பயணம் செய்து எது எங்கே இருக்கிறது என்று அறிந்து கொண்டு மீண்டும் இருந்த இடத்திற்கே வரலாம்.

ஒரே நேரத்தில் பல செல்களில் டேட்டா: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சில வேளைகளில் ஒரே டேட்டாவினை சில குறிப்பிட்ட செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். அப்போது என்ன செய்கிறோம். பெரும்பாலானோர் ஒரு செல்லில் டேட்டாவை டைப் செய்து விட்டு பின் அதனை காப்பி செய்து அதன்பிறகு எந்த எந்த செல்களில் எல்லாம் பேஸ்ட் செய்திட வேண்டுமோ அந்த செல்களில் பேஸ்ட் செய்வார்கள். இது சிரமம் தரும் செயல்தான். ஆனால் வேறு வழி? இருக்கிறது. எக்ஸெல் அதற்கான மிக மிக எளிய வழி ஒன்றை வைத்துள்ளது. முதலில் எந்த எந்த செல்களில் எல்லாம் குறிப்பிட்ட ஒரே டேட்டாவை அமைக்க வேண்டுமோ அதனை எல்லாம் தேர்ந்தெடுக்கவும்.

இந்த செல்கள் எல்லாம் அடுத்தடுத்து இல்லாமல் இருக்கலாம். எனவே இவற்றைத் தேர்ந்தெடுக்கையில் கண்ட்ரோல் கீயினை அழுத்தியவாறு தேர்ந்தெடுக்கவும். அனைத்தும் தேர்ந்தெடுத்த பின் இப்போது டேட்டாவை டைப் செய்தாக வேண்டும் அல்லவா? அவசரப்பட வேண்டாம். என்டர் கீ அழுத்த வேண்டாம். டேட்டாவை ஏதேனும் ஒரு செல்லில் டைப் செய்துவிடுங்கள். பின்னர் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு என்டர் தட்டுங்கள். ஆஹா! தேர்ந்தெடுத்த செல்களில் எல்லாம் டேட்டா டைப் ஆகிவிட்டதே என்று ஆச்சரியப்படுகிறீர்களா! கம்ப்யூட்டர் என்றைக்குமே நம் வேலையை எளிதாக்கும் சாதனம்தான்.

செல்லின் அகலம்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் பணியாற்றுகையில் செல் ஒன்றின் அகலத்தை கூட்டுவதும் குறைப்பதுவுமாக இருப்போம், இல்லையா? சில நேரங்களில் செல் ஒன்றின் அகலத்திலேயே இன்னொரு செல்லை அமைக்க முயற்சி செய்வோம். இதற்கு எக்ஸெல் மெனுக்கள் ஒரு வழியும் கொண்டுள்ளன. Format மெனு சென்று அதில் Column என்ற மெனுவினைப் பெற்று அதில் Width என்ற பிரிவில் Column த்திற்குத் தேவைப்படும் அகலத்தினை அமைப்போம். ஆனால் குறிப்பிட்ட Column எந்த அகலத்தில் இருக்க வேண்டும் என நாம் முன்பே முடிவு செய்திருக்க வேண்டுமே; அதனை எப்படி முடிவு செய்வது? இதற்கான வழி Column ஒன்றின் அகலத்தை மட்டும் காப்பி செய்து அதனை இன்னொரு செல் மீது அமைப்பது. அது எப்படி அகலத்தை மட்டும் காப்பி செய்வது? என்ற வியப்பு வருகிறதா! இதோ பார்ப்போம்.

முதலில் நீங்கள் விரும்பும் அகலத்தில் உள்ள செல்லைத் தேர்ந்தெடுங்கள். இதனை காப்பி செய்திடுங்கள். இதற்கான வழிகள்: Copy பட்டன் அழுத்துவது / Ctrl + C கீகளைப் பயன்படுத்துவது / Edit மெனு சென்று அதில் Copy பிரிவில் கிளிக் செய்வது எனப் பல வழிகள் உள்ளன. இதில் உங்களுக்குப் பிரியமான வழியில் காப்பி செய்திடவும். இனி அடுத்த படியாக இந்த அகலத்தில் இருக்க வேண்டிய Column ஐத் தேர்ந்தெடுக்கவும். அடுத்தபடியாக Paste Special என்ற பிரிவிற்குச் செல்ல வேண்டும். இது எங்கு உள்ளது? Edit மெனு சென்றால் இந்த பிரிவினைப் பார்க்கலாம். இதனைத் தேர்ந்தெடுத்தவுடன் Paste Special விண்டோ உங்களுக்குக் கிடைக்கும். Column Width என்ற பிரிவினைக் கண்டறியவும். இதனைத் தேர்ந்தெடுத்து ஜஸ்ட் ஓகே கிளிக் செய்திடவும். மேஜிக் நடந்தது போல எந்த டேட்டா மற்றும் பார்மட்டிங் எதுவும் மாறாமல் அகலம் மட்டும் மாறி அந்த இணிடூதட்ண மாற்றப்படுவதனைக் காணலாம்.

இழுத்துச் சென்றால் புதிய ஒர்க்புக்: நல்ல கட்டமைப்பில் ஓர் ஒர்க்ஷீட்டினை அமைத்துவிட்டால் அதனையே அடிப்படையாக வைத்து மற்ற ஒர்க்ஷீட்டுகளையும் அமைக்க விரும்புவோம். அதற்காக அந்த ஒர்க்ஷீட்டை அப்படியே காப்பி செய்திடுவோம். சில நேரங்களில் வேறு பயன் பாட்டிற்காகவும் ஒர்க் புக்கினை காப்பி செய்திட வேண்டியதிருக்கும். இதற்காக நிறைய காப்பி அண்ட் பேஸ்ட் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இது சற்று களைப்பான சமாச்சாரமாகத் தெரிகிறதா? இதற்குப் பதிலாக இந்த ஒர்க்ஷீட்டிற்கான டேப்பினை இழுத்துச் சென்று விட்டு அந்த இடத்தில் புதிய ஒர்க்புக்கினை அமைப்பது எவ்வளவு எளிதானது. ஆம், எக்ஸெல் அந்த வசதியினைத் தருகிறது.

முதலில் எந்த ஒர்க்புக் கிலிருந்து காப்பி செய்திட வேண்டுமோ அந்த ஒர்க்புக்கி னைத் திறந்து கொள்ளுங்கள். முதலில் இதனை ரெஸ்டோர் செய்திட வேண்டும். அதாவது அப்படியே காப்பி செய்வதற்குத் தயார் படுத்த வேண்டும். இதற்கு முதலில் Ctrl + F5 அழுத்துங்கள். இனி எந்த ஒர்க்ஷீட்டினை காப்பி செய்திட வேண்டுமோ அதன் டேபை மவுஸின் கர்சரைப் பிடித்து இழுக்கவும். ஒர்க் புக்கைச் சுற்றி கிரே ஸ்பேஸ் இருக்கும் அல்லவா? அதில் எங்கேனும் விட்டுவிடவும். மவுஸின் முனையை விட்டவுடன் அந்த ஒர்க் ஷீட்டுடன் புதிய ஒர்க்புக் உண்டாக்கப்படும். பழைய ஒர்க்புக் அப்படியேதான் இருக்கும். இதனை வேறு பெயரில் சேவ் செய்து பயன்படுத்தலாம். இன்னும் சில ஒர்க்ஷீட்டுகளை இதில் இணைக்க வேண்டும் என விரும்பினாலும் இணைக்கலாம்.
ஒவ்வொரு வரிசையாகக் காப்பி செய்து பேஸ்ட் செய்வதைக் காட்டிலும் இது எவ்வளவு எளிதானது என்று பார்த்தீர்களா!

எக்ஸெல் தொகுப்பில் ஆட்டோசேவ்: எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்களைத் தாமாக சேவ் செய்திடும் அரிய வசதி ஒன்று உள்ளது. பலர் இதனை செட் செய்து இதன் பயனை அனுபவிக்காமலேயே இருக்கின்றனர். குறிப்பிட்ட கால அவகாசத்தில் தானாகவே செயல்படும் பைல்கள் அதுவரை மேற்கொண்ட தகவல்களுடன் சேவ் செய்யப்படும். இதன் டிபால்ட்(Default) செட்டிங்ஸ் பத்து நிமிடங்களாகும். எனவே புரோகிராமிற்கு ஏதாவது ஏற்பட்டு கிராஷ் ஆனால் நீங்களாக சேவ் செய்யாதபோது உங்களுடைய ஒன்பது நிமிட வேலை வீணாகிவிடும். எனவே ஆட்டோ சேவ் எனச் சொல்லப்படும் இந்த செயல்பாட்டின் நேரத்தைச் சுருக்கமாக சிறிய கால அவகாசமாக செட் செய்திடலாம். மேலும் இந்த பைலுக்கான பேக்கப் பைலை உருவாக்கும் படியும் செட் செய்திடலாம்.

இதற்கு Tools மெனு கிளிக் செய்து அதில் வரும் மெனுவில் Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் டயலாக் பாக்ஸில் Save என்ற டேபில் கிளிக் செய்தால் வரும் சிறிய விண்டோவில் Save Auto recover in every என்று ஒரு வரியும் அதன் அருகே நிமிடங்களை செட் செய்திட எண்ணுடன் மேல் கீழ் அம்புக் குறிகளும் கிடைக் கும். இதில் 10 என்று இருப்பதை மாற்றுங்கள். எத்தனை நிமிடங்களுக்கு ஒருமுறை தகவல்களை சேவ் செய்திட எண்ணுகிறீர்களோ அந்த எண்ணை அமைக் கவும். பின் அதன் கீழாக Auto recover save location என்று ஒரு வரியின் எதிரே எங்கு இந்த பைல் சேவ் செய்யப் பட வேண்டும் என்பதனை காட்டும் கட்டம் இருக்கும். இங்கு நீங்கள் விரும்பும் இடத்தில் பைலை சேவ் செய்திடும் வகையில் மாற்றலாம். பின் ஓகே கொடுத்து வெளியேறவும்.

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் ஏன் இந்த அடையாளம்?

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் திடீரென ஒரு நெட்டு வரிசை முழுவதும் XXXX எனக் காணப்படும். இது எதனைக் குறிக்கிறது? ஏன் இந்த அடையாளம் வருகிறது. சிறிது எண்ணிப் பார்க்க வேண்டிய விஷயம். நாம் தெளிவாக டேட்டாவினைத் தந்துள்ளோம். ஆனால் தேவையற்ற வகையில் சம்பந்தமில்லால் ஏன் இந்த அடையாளம் வருகிறது? எண்கள் இருக்க வேண்டிய செல்லில் ஏன் இந்த நான்கு குறியீடுகள் வருகின்றன? வேறு ஒன்றும் இல்லை. செல்லின் அகலத்தை மீறி நீங்கள் எண்களைத் தந்திருக்கிறீர்கள். அகலம் போதாததால் இந்த அடையாளம் காட்டப்படுகிறது. அடையாளம் நீங்கி எண்கள் வரவேண்டும் என்றால் என்ன செய்திட வேண்டும்? செல்லின் அகலத்தைச் சற்று அதிகப்படுத்த வேண்டும். அவ்வளவு தான். நீங்கள் எதிர்பார்க்கும் எண்கள் அங்கு இடம் பெறும்.

சில நேரங்களில் 2E+15 என்ற அடையாளம் இடம் பெற்றிருக்கும். இதன் பொருள் என்ன? ஒன்றுமில்லை; உங்கள் எண் சயின்டிபிக் நொட்டேஷனில் தரப்பட்டுள்ளது. இது எப்போது ஏன் ஏற்படுகிறது. அந்த செல்லின் பார்மட் ஜெனரலாக இருந்து நீங்கள் கொடுக்கும் எண் மிக நீளமானதாக இருந்தால் இந்த மாதிரி சயின்டிபிக் நொட்டேஷன் கொடுக்கும் வகையில் எக்செல் வடிவமை க்கப்பட்டுள்ளது. இங்கும் செல்லின் அகலத்தை நீட்டி விட்டால் பிரச்னை தோன் றாது. எப்படி செல்லின் அகலத்தை நீட்டுவது? மவுஸ் பாய்ண்ட்டரை இரண்டு செல்கள் பிரிக்கும் இடத்தில் கொண்டு செல்லுங்கள். அது இரண்டு சைட் அம்புக்குறியாக மாறும். உடனே இடது மவுஸ் பட்டனைக் கிளிக் செய்து அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள்.

இனி அப்படியே மவுஸை வலது பக்கம் சிறிது சிறிதாக இழுங்கள். தானாக செல் அகலம் அதிகரிக்கப்படும். இதற்குப் பதிலாக டயலாக் பாக்ஸ் திறந்தும் AutoFit கட்டளை கொடுக்கலாம்.முதலில் Format மெனு செல்லுங்கள். அதில் Column துணை மெனு தேர்ந்தெடுங்கள். இதில் Width பிரிவில் Autofit Selection என ஒரு பிரிவு இருக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறினால் நெட்டு வரிசை டேட்டாவிற்கேற்றபடி தானாக பெரிதாகி அட்ஜஸ்ட் செய்து கொள்ளும்.